தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கியிருந்த இந்த படத்தில் லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், விது, இளவரசு, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் இந்த படத்தை பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘ஜிகர்தண்டா2’ படம் பார்த்து இந்த படம் ஒரு குறிஞ்சி மலர் எனப் பாராட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்… இன்றைய திரையுலகில் நடிகவேள் எஸ் ஜே சூர்யா என பாராட்டியுள்ளார்.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இது ஒரு மகுடம் எனவும் பாராட்டி இருக்கிறார். சந்தோஷ் நாராயண இசையை குறிப்பிட்டு தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என நிரூபித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.
இதுவரை பார்க்காத லாரன்ஸ் இந்த படத்தில் பார்க்கிறோம். மேலும் கலை இயக்குனர், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சி ஆகியவற்றையும் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டு ப்ரவுட் ஆஃப் யூ மை பாய் என தெரிவித்துள்ளார்.
My boys Rajini praises Jigarthanda xx movie team
ரஜினியின் பாராட்டு அறிக்கை இதோ