தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசானது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மதுரையில் ஒரே ஷெட்யூலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. மொத்த படமும் 36 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸுடன் தான் இருக்கும் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, “36 நாட்கள் ஏக் தாம் ஒர் ஷெட்யூல் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ன ஒரு அட்டவணை, என்ன ஒரு கான்செப்ட், என்ன ஒரு தொகுப்பு, என்ன ஒரு புகைப்படம், என்ன செலவு, என்ன தயாரிப்பு மதிப்பு இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி. என கூறி இருந்தார்.
‘Jigarthanda Double X’ finished in the first schedule