கார்த்தி படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த மணிரத்னம்..!

கார்த்தி படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த மணிரத்னம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and mani ratnamகாஷ்மோரா படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி விரைவில் மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதன் சூட்டிங் வருகிற ஜீலை 8ஆம் தேதி ஊட்டியில் தொடங்குகிறது.

இதில் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.

வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னமே இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘காற்று வெளியிடை’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அழகான வரி பாரதியாரின் புகழ்பெற்ற காதல் பாடல்களில் ஒன்றான ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலில் இடம் பெற்றுள்ளதாம்.

தன் முதல் படத்திற்கு ரஜினி பாடலை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு

தன் முதல் படத்திற்கு ரஜினி பாடலை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabhu stillsகும்கி படத்தில் அறிமுகமாகி அதிரடி வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் விக்ரம் பிரபு.

தற்போது இவரது நடிப்பில் வீர சிவாஜி மற்றும் வாகா படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விக்ரம் பிரபு தொடங்கியுள்ளார்.

பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என தன் நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக நெருப்புடா என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் (Chandaraa Arts) மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் விக்ரம் பிரபு.

இவருடன் நிக்கி கல்ராணி, பொன்வண்ணன்,  “நான் கடவுள்” ராஜேந்திரன்,  “ஆடுகளம்” நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அசோக் குமார் இப்படத்தை இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ரோக்கேஷ் பாடல்களை எழுதுகிறார். ஆர். டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கலையை எம் பிரபாகரன் கவனிக்கிறார்.

ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் டிரெண்ட்டாகி வரும் நிலையில் ஒரு படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கும் சிம்புக்கும் ஏற்பட்ட காஸ்ட்யூம் கனெக்ஷன்..!

விஜய்க்கும் சிம்புக்கும் ஏற்பட்ட காஸ்ட்யூம் கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and simbuகௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ எப்போது முடியும் என்பது சம்பந்தபட்டவர்களுக்கே தெரியாது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AAA’ என்ற ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு.

யுவன் ஷங்கர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை தொடர்ந்து கிருஷ்ணன் வசந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு அந்தோணி ரூபன்.

இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார். எனவே பிரபல காஸ்ட்யூம் டிசைனரான சத்யா இப்படத்திற்கு விதவிதமான காஸ்ட்யூம்களை தயார் செய்ய இருக்கிறாராம்.

இவர்தான் விஜய்யின் தெறி மற்றும் தளபதி 60 ஆகிய படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் – அஜித் ரசிகர்களே… எதுல விளையாடுறதுன்னே தெரியாதா…?

விஜய் – அஜித் ரசிகர்களே… எதுல விளையாடுறதுன்னே தெரியாதா…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

swathi murder vijay and ajith head on arrested ramkumarகடந்த 10 நாட்களாக தமிழத்தை உலுக்கிய சம்பவம் ஸ்வாதி என்ற பெண் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கொடுமைதான்.

இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் கொலைக்காரன் ராம்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

இதனிடையில் அந்த கொலைக்காரனின் முகம் பத்திரிகைகளில் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.

அந்த கொலைக்காரன் முகத்தை மார்ப்பிங் செய்த விஜய் ரசிகர்கள் அஜித் முகத்தை ஒட்ட வைத்துள்ளனர்.

அதுபோல் அஜித் ரசிகர்கள் விஜய் முகத்தையும் இணைத்துள்ளனர்.

என்னதான் நடிகர்களின் படங்களுக்குள் போட்டி இருந்தாலும், அவர்களுக்குள் அடித்து சண்டை போட்டுக் கொள்ளட்டும்.

அதை விடுத்து இதுபோன்ற விஷயங்களில் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளலாமா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் இது போன்ற ரசிகர்களின் செயலை கண்டித்தால் நன்றாக இருக்கும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

https://www.youtube.com/watch?v=L0FiXsRKEsc

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் தளபதி…!

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் தளபதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinமனிதன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் உதயநிதி.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எழில் இயக்கத்தில் ஒரு படம் என ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி.

இந்நிலையில் இதனையடுத்து இயக்குனர் பொன்ராமின் உதவி இயக்குனர் தளபதி இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கபாலி ரஞ்சித்துக்கு கல்தா..? முத்தையாவுடன் இணையும் சூர்யா..?

கபாலி ரஞ்சித்துக்கு கல்தா..? முத்தையாவுடன் இணையும் சூர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaகபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்குவார் என செய்திகள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், புதிதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறோம்.

அதாவது கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தில் தந்தை-மகன் பாசத்தை ஆக்ஷன் உடன் சொல்லவிருக்கிறாராம் இயக்குனர்.

தந்தையாக ராஜ்கிரண் நடிக்க, முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக நடிக்கி உள்ளார் சூர்யா.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More Articles
Follows