வசந்தபாலன் தயாரிக்கும் DEMON படத்திற்கு விஜய்சேதுபதி – மிஷ்கின் ஆதரவு

வசந்தபாலன் தயாரிக்கும் DEMON படத்திற்கு விஜய்சேதுபதி – மிஷ்கின் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் DEMON என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத் தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுதி இயக்கியவர்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ,
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

vijay sethupathi and mysskin will release ‘DEMON’ first Look

120 சினிமா நட்சத்திரங்கள் மோதும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் CCL UPDATE

120 சினிமா நட்சத்திரங்கள் மோதும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் CCL UPDATE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 நாளை முதல் துவங்குகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது.

நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிகழ்வில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது, இது தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்கள் 19 ஆட்டங்களை நடத்தவுள்ளன

இந்த 8 அணிகளுள் ஒன்று CCL கோப்பையை வெல்லும்.

மும்பை ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

மேலும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாகவும், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்க, போனி கபூர் உரிமையாளரான பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கேப்டனாக ஜிசுசென் குப்தா, கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர்.

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற ஸ்டேடியங்கள் முந்தைய சீசன்களில் நிரம்பி வழிந்தன. இந்த முறை மற்ற இடங்களிலும் கூட்டமாக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். Zee Anmol Cinema சேனல் அனைத்து 19 CCL கேம்களையும் ஒளிபரப்பவுள்ளது.

மும்பை ஹீரோஸ் போட்டிகள் & பிக்சர்ஸ் இந்தி, பஞ்சாப் தி ஷேர் போட்டிகள் PTC பஞ்சாபியிலும், தெலுங்கு வாரியர்ஸ் போட்டிகள் Zee சினிமாவிலும், சென்னை ரைனோஸ் போட்டிகள் Zee திரையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ் போட்டிகள் ஜீ பங்களா மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டிகள் ஃப்ளவர்ஸ் டிவியிலும் ஒளிபரப்பப்படும்.

Celebrity Cricket League CCL UPDATE where 120 movie stars will compete

சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 24’ படத்திற்கு ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார்.

ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஹரிஷ் பிரபு எழுதி இயக்குகிறார்.

இசை – சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு – சின்டோ போடுதாஸ்,
படத்தொகுப்பு – கணேஷ் சிவா,
கலை – இ.தியாகராஜன்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன், பாண்டம் பிரதீப்,
பாடல் வரிகள் – உமாதேவி, கருப்பன்,
ஆடை வடிவமைப்பாளர் – டினா ரொசாரியோ,
ஒப்பனை – ஆர்.சீரலன்,
ஒலி வடிவமைப்பு – பிரதாப்,
ஒலிக்கலவை – டி.உதயகுமார்,
VFX – ஆர். ஹரிஹர சுதன்,
ஸ்டில்ஸ் – மோதிலால்,
DI – இன்ஃபினிட்டி மீடியா,
கலரிஸ்ட் – சண்முக பாண்டியன்.எம்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
டைரக்ஷன் டீம் – கிஷோர் கே.குமார், ஹரி பிரசாத் வி,
தயாரிப்பு நிர்வாகி – கே.ஆர்.பாலமுருகன்,
சீனியர் எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன்ஸ் – சந்திரசேகர் வி,
நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜிகேஎம் தமிழ் குமரன்

‘Thiruvinkural’ first Look Poster released

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

எனவே நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

அப்போது நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது…

”என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி” என்றார்.

நடிகர் சிங்கம்புலி கூறியதாவது…

“அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி.

என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது…

”இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி.

இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.

Actor Singam Puli praises Ayali web series

கேரள எல்லையை தாண்டிய ‘இரட்டா’..; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ்

கேரள எல்லையை தாண்டிய ‘இரட்டா’..; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘இரட்டை’.

இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகியோரின் கதையை சொல்லும் இப்படம் பல சஸ்பென்ஸ்களை மறைத்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் மலையாளத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் என்ற பெருமையை ‘இரட்டா’ பெற்றுள்ளது.

சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் கொண்ட இப்படம் பிப்ரவரி 17 முதல் கேரளாவுக்கு வெளியே வெளியாகிறது.

மற்ற படங்களில் இருந்து ‘இரட்டா’ வித்தியாசமானது, இதுவரை நாம் பார்த்த போலீஸ் கதையோ, காவல் நிலையம் சார்ந்த படமோ இது இல்லை.

இப்படத்தின் கதாநாயகியாக தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை ஜோஜு ஜார்ஜின் அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜைப் பற்றி சொல்லவே வேண்டாம், அவர் தனது கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் நடிகர். சில தமிழ் படங்களிலும் இவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ஜோஜு ஜார்ஜின் கேரியரில் ‘இரட்டா’ படம் இன்னொரு திருப்புமுனை என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இரட்டா’ படத்தின் ஒளிப்பதிவை சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவுத் துறையில் பணியாற்றிய விஜய் கையாண்டுள்ளார். அன்வர் அலியின் பாடல் வரிகளுக்கு ஜேக்ஸ் பிஜோ இசையமைத்துள்ளார்.

இவர் ரசிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். மனு ஆண்டனி இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார். கலை திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ். சங்கதானம் கே ராஜசேகர், மார்க்கெட்டிங் & மீடியா பிளான் அப்ஸ்குரா.

இரட்டை

Joju Georges super hit Iratta releases out of Kerala

‘அயலி’-க்கு கிடைத்த வரவேற்பு புது பெஞ்ச்மார்க்… – வசனகர்த்தா சச்சின்

‘அயலி’-க்கு கிடைத்த வரவேற்பு புது பெஞ்ச்மார்க்… – வசனகர்த்தா சச்சின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

எனவே நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

அப்போது வசனகர்த்தா சச்சின் கூறியதாவது…

”ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது.

எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது.

ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில்…

“விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

அயலி-க்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான் இந்த தொடரின் வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற வாய்ப்பை வழங்கிய ஜீ5 இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.

நடிகை காயத்ரி பேசுகையில்…

“ அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில் பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் லிங்கா பேசுகையில்…

“அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி” என்றார்.

நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில்…

”இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி” என்றார்.

Dialogue writer Sachin about Ayali web series

More Articles
Follows