Breaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்

Breaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman beat Ilaiyaraja in Number of National awardsசினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் கடந்த 64 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 65வது ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு 4 விருதுகள் கிடைத்தன.

ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி அவர்கள் ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளில் இதுவரை இளையராஜா 5 தேசிய விருதுகளை வென்றிருந்தார். ரஹ்மான் 4 விருதுகளை மட்டுமே வென்றிருந்தார்.

இன்று இரண்டு விருதுகள் ஏஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளதால், இளையராஜாவை முந்திவிட்டார். தற்போது அவருக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு இளையராஜா பெற்ற தேசிய விருதுகள் மற்றும் ஆண்டு

31வது ஆண்டு சகார சங்கமம் தெலுங்கு படம் 1983
33வது ஆண்டு சிந்து பைரவி தமிழ் படம் 1985
36வது ஆண்டு ருத்ர வீணா தெலுங்கு படம் 1988
57வது ஆண்டு பழசிராஜா மலையாள படம் 2009
63வது ஆண்டு தாரை தப்பட்டை தமிழ் படம் 2015

ஏஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள்.. (ஏப்ரல் 13, 2018 வரை)

40வது ஆண்டு ரோஜா தமிழ் படம் 1992
44வது ஆண்டு மின்சார கனவு தமிழ் படம் 1996
49வது ஆண்டு லகான் ஹிந்தி படம் 2001
50வது ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் 2002
65வது ஆண்டு மாம் ஹிந்தி படம் 2017
65வது ஆண்டு காற்று வெளியிடை தமிழ் படம் 2017

AR Rahman beat Ilaiyaraja in Number of National awards

#Breaking: ஆசிபாவை சிதைத்த மிருகங்களை மக்களே தண்டிக்கனும்: விவேக்

#Breaking: ஆசிபாவை சிதைத்த மிருகங்களை மக்களே தண்டிக்கனும்: விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek condemn for 8 years old girl Asifa murderஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு‌வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.

அதன்பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அவளின் உடல் ஒரு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து அவளை ஒரு கோயிலில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவளுக்கு உணவு தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தால், அவளது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத ஒருவன்தான் இந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 8 பேரில் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில் நடிகர் விவேக்கும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு இதோ…

Vivekh actor‏Verified account @Actor_Vivek 7m7 minutes ago

வன்முறை,பயங்கரவாதம்,இவற்றை விட கொடியதும் கேவலமானதும் பாலியல் பலாத்காரம்.

அதிலும் பெண் குழந்தையை சிதைக்கும் இந்த மிருகங்கள் மக்கள் முன் அல்லது மக்களால் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனே!

அந்த சின்ன தேவதை ஆசிபாவின் மலர் உடலுக்கு என் கண்ணீர் பூக்கள்

Actor Vivek condemn for 8 years old girl Asifa murder

Breaking: 65வது தேசிய விருதுகள் அறிவிப்பு; சிறந்த படம்? நடிகர்கள் யார்?

Breaking: 65வது தேசிய விருதுகள் அறிவிப்பு; சிறந்த படம்? நடிகர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

List of Winners of 65nd Indian National Film Awards 2018இந்திய நாட்டின் 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை இங்கே தொகுத்து வருகிறோம்.

சிறந்த ஹிந்தி படம் நியூட்டன்

சிறந்த மலையாள படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுத்தலும் திரிக்சாக்‌ஷியம் அறிவிப்பு

டேக் ஆஃப் (மலையாளம்) படத்திற்காக நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு தேசிய விருது அறிவிப்பு.

65-வது தேசிய திரைப்பட விருது : சிறந்த தமிழ் படமாக “டூலெட்” தேர்வு.

இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்

ஸ்பெஷல் எஃப்க்ட்ஸ்க்காக பாகுபலி 2 திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த பொழுது போக்கு பிரபலமான திரைப்படம் படமாக பாகுபலி2 தேர்வு.

ராணா நடித்த காஸி சிறந்த தெலுங்கு படமாக தேர்வு.

பெங்காலி நடிகர் ரித்திசென்…சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெறுகிறார்.

சிறந்த துணை நடிகர் பஹத் பாசில்.

‘மாம்’ (பின்னணி இசை) &‘காற்று வெளியிடை’  (பாடல்கள்) படத்தை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது.

காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது

மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.

சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.

பொய் மறஞ்ச காலம் மலையாள பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.

இந்தி நடிகர் வினோத் கண்ணாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

தமிழ் சினிமா வெறும் 4 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.

List of Winners of 65nd Indian National Film Awards 2018

பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற டூ லெட்(சிறந்த மாநில மொழி தமிழ்) படத்தில் ஒரு காட்சி. இன்னமும் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகவில்லை.

to let tamil movie

டபுள் மீனிங் இல்ல; ஓபனாவே சொல்லிட்டோம் : IAMK பற்றி கௌதம் கார்த்திக்

டபுள் மீனிங் இல்ல; ஓபனாவே சொல்லிட்டோம் : IAMK பற்றி கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik talks about his Iruttu Araiyil Murattu Kuththuஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

அந்த படமே A லட்சணத்தில் இருந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்திதான்.

அப்படியென்றால் அதே கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் டபுள் A ஆக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த படம் குறித்து நாயகன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

இருட்டு அறையில் முரட்டு குத்து காமெடி கலந்த ‘அடல்ட்’ பேய் படம்.

குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே, இப்படத்தை எடுத்துள்ளோம்.

கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு.

ஹரஹர மஹாதேவகி படம் யாருக்கு எல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கு எல்லாம் இந்த படமும் பிடிக்காது.

அந்த படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருந்திருக்கும். ஆனால் இதில் எல்லாத்தையும் ஓபனாவே சொல்லியிருக்கோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Gautham Karthik talks about his Iruttu Araiyil Murattu Kuththu

Breaking First On Net: உன்னை காக்க தவறிவிட்டோம்; ஆஷிபாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்

Breaking First On Net: உன்னை காக்க தவறிவிட்டோம்; ஆஷிபாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan reaction Asifa rape murder caseஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு‌வயது சிறுமி ஆஷிஃபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.

அதன்பின்னர் ஒருவாரத்திற்குப் பிறகு ரசனா என்ற வனப்பகுதியில் இருந்து அவளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து அவளை ஒரு கோயிலில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அந்த இளம் சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தால், அவளது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத ஒருவன்தான் இந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கற்பழிப்பு கொடுமை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்….

ஒரு மனிதனாக தந்தையாக குடிமகனாக நான் தோற்றதற்காக கோவப்படுகிறேன். என்னை மன்னித்து விடு ஆஷிபா.

இந்த நாட்டில் உனக்கு நாங்கள் போதுமான பாதுகாப்பை கொடுக்க தவறிட்டோம்.

உன்னே போன்ற குழந்தைகளின் உரிமைக்காக நீதிக்காக நான் போராடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

Kamalhassan reaction Asifa rape murder case

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 5m5 minutes ago
Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u

asifa murder case

நரை முடிக்கு இருக்கா தீர்வு.? இதோ வந்துட்டு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ!

நரை முடிக்கு இருக்கா தீர்வு.? இதோ வந்துட்டு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V Care VIP Hair color shampoo to avoid white hairதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..

“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான்.

நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.

இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்வருகின்றனர்.

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது.

ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.

உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே.

ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள்.

அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்..

சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக் கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.

இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.

அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டு செல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது.

ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம்.

இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக் கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரை முடியை தெரியவிடாமல் தடுக்கும்.

இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான்.

ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம்.

சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே.

V Care VIP Hair color shampoo to avoid white hair

vip hari color shampoo vip hari color shampoo

More Articles
Follows