தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து தன்னுடைய twitter பதிவில்…
கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
“இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்”
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்
உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி
@mkstalin | @CMOTamilnadu
#KalaignarMemorial #கலைஞர்_நினைவிடம்
Lyricist Vairamuthu visited Kalaignar Memorial