BREAKING வந்திய தேவனாக ரஜினி நடிக்கணும்.; ஜெயலலிதா ஆசை; ரஜினி ஓபன் டாக்

BREAKING வந்திய தேவனாக ரஜினி நடிக்கணும்.; ஜெயலலிதா ஆசை; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒன்றாக மேடையேறினர்.

அப்போது கமல் பேசியதாவது…

“பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். அதன் பிறகு நாங்களும் அந்த படத்தை உருவாக்க முயன்றோம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இன்று மணிரத்னம் அது நிறைவேற்றி இருக்கிறார்” என பட குழுவினரை வாழ்த்தினார் கமல்ஹாசன்.

அதன் பின்னர் ரஜினி பேசியதாவது…

எல்லாரும் பொன்னியின் செல்வன் நாவல் படிச்சிட்டீங்களா நாவல் படித்து விட்டீர்களா? என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.

நான் ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினால் முதலில் அதில் எத்தனை பக்கங்கள் இருப்பது என்பதை பார்ப்பேன்? ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் 2000 பக்கங்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அது படிப்பதை தவிர்த்து வந்தேன்.

அப்போது குமுதம் வார இதழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று இருந்தது. அதில் வாசகர் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்து இருந்தார்.

அதில் ஒரு வாசகர் இப்போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டால் அதில் வந்தியத் தேவன் கேரக்டர் யார் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஜெயலலிதா ரஜினிகாந்த் நடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு தான் எனக்கு பொன்னின் செல்வன் நாவல் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. படித்தேன் படித்தேன் படித்தேன். அதில் மூழ்கி விட்டேன் அவ்வளவு சிறப்பான நாவல்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்

Kamal and Rajini mass speech at PS1 Trailer Launch

BREAKING த்ரிஷா உடன் மேடையேறி ரஜினி-கமலுக்கு கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா ராய்

BREAKING த்ரிஷா உடன் மேடையேறி ரஜினி-கமலுக்கு கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Ponniyin Selvan Audio Launch Photos

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக மேடையேறினர்.

த்ரிஷா பேசியதாவது…

மணிரத்னம் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த பட வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. கமல் & ரஜினி இருவரையும்எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். போர் அடிக்காது.” என பேசினார் த்ரிஷா.

ஐஸ்வர்யாராய் பேசும்போது…

“எனது குருநாதர் மணிரத்னம். அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இருந்து தான் என்னுடைய பயணம் தொடங்கியது. இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

ரஜினி உடன் நடித்து விட்டேன். கமலுடன் இன்னும் நடிக்கவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன்.

நீங்கள் இருவரும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்” என பேசினார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya and Trisha speech at PS1 trailer Launch

BREAKING பான் இந்தியா பாதை போட்டது அவங்கதான்.; இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்

BREAKING பான் இந்தியா பாதை போட்டது அவங்கதான்.; இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

டைரக்டர் ஷங்கர் பேசியதாவது…

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் முதலில் வந்த ஃபேன் இந்தியா படம். அவருடன் ஏ ஆர் ரகுமான் இணைந்து இருந்தார்.

அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பே பான் இந்தியா பாதையை போட்டு விட்டார்கள்.

நாங்கள் அந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதன் பின்னர்.. “இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து விட்டது. செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அடுத்த கட்ட படப்படிப்பு கமல் சார் உடன் தொடங்கும்” என பேசினார் ஷங்கர்.

Director Shankar sema speech at PS1 trailer Launch

BREAKING முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே – பார்த்திபன்.; பிரபு & கார்த்தியை வச்சி செய்த ஜெயராம்

BREAKING முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே – பார்த்திபன்.; பிரபு & கார்த்தியை வச்சி செய்த ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛பொன்னியின் செல்வன்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர், ராஹா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பார்த்திபன் மேடையேறி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசினார்.

முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே.. என்றார். மேலும் சுஹாசினிக்கு முன் மணிரத்னத்தின் காதலி யார் தெரியுமா? அது பொன்னியின் செல்வன் தான்.

அந்த நாவலை லவ் செஞ்சா தான் இப்படி படமெடுக்க முடியும்.” என பேசினார் பார்த்திபன்.

பின்னர் நடிகர் ஜெயராம் மேடையேறி படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை அவரவர் குரல்களில் பேசி காட்டினார்.

முக்கியமாக சாப்பாட்டுக்காக பிரபு ஏங்கியதும்… அடுத்த சீன்காக கார்த்தி காத்துருந்ததும் பற்றி பேசினார்.

அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது. ரஜினி கமல் மணிரத்னம் த்ரிஷா கார்த்தி ஷங்கர் உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.

Jayaram and Parthiban sema funny speech at PS1 event

Kamal Shankar Rajini at PS1 Audio Launch

Rajinikanth entry Ponniyin Selvan 1 Audio Launch live updates

Just In ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ கலைஞர்கள் யார்?

Just In ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ கலைஞர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு கலைஞர்களும் அரங்கத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

சரத்குமார் மணிரத்னம் சுஹாசினி பிரபு உள்ளிட்டோர் முதலில் வந்து விட்டனர்.

பின்னர் பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜெயம் ரவி, துருவ் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஏஆர். ரஹ்மான், கிஷோர் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் சீயான் விக்ரம் வந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது. மணிரத்னத்தை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி பிடித்துக் கண்டார் ஐஸ்வர்யா ராய்.

8 மணியளவில் ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய கரவொலி உற்சாகம் விண்ணைப் பிளந்தது.

ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதன்பின்னர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் ரஜினி மணிரத்னத்தை வாழ்த்தி இருக்கையில் அமர்ந்தார்.

Aishwarya Vikram Karthi Ravi got blessing from Rajini at PS1 Audio Launch

Just In ‘PS1’ இசை விழாவில் அவரை கண்டதும் துள்ளி வந்து கட்டிப் பிடித்த ஐஸ்வர்யா ராய்

Just In ‘PS1’ இசை விழாவில் அவரை கண்டதும் துள்ளி வந்து கட்டிப் பிடித்த ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு கலைஞர்களும் அரங்கத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

சரத்குமார் மணிரத்னம் சுஹாசினி பிரபு உள்ளிட்டோர் முதலில் வந்து விட்டனர்.

பின்னர் பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, துருவ் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஏஆர். ரஹ்மான், கிஷோர் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் சீயான் விக்ரம் வந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது.

ஒவ்வொருவரையும் பார்த்து கை கொடுத்து கட்டி பிடித்து வந்தார் ஐஸ்வர்யா.

மணிரத்னத்தை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி பிடித்துக் கண்டார் ஐஸ்வர்யா ராய்.

இதனை கண்டதும் ரசிகர்கள் கரவொலி வண்ணம் பிளந்தது.

Aishwarya Rai entry Ponniyin Selvan 1 Audio Launch live updates

More Articles
Follows