தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து சில நாட்களுக்கு முன் ரஜினியின் காலா மற்றும் விஜய்யின் மெர்சல் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
ஆனால் மற்ற அமைப்பின் தொழிலாளர்களை வைத்து தன் துப்பறிவாளன் பட சூட்டிங்கை நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
இந்நிலையில் மீண்டும் பிரச்சினை எழவே, பெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளதாவது…
‘கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) பெரும் பங்கு வகித்து வருகிறது.
பல சூழலில் இழுபறி நிலவிய போதும் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமாவின் பயணத்துக்கு உதவியிருக்கிறோம்.
தற்போது எங்கள் அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மற்றொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது.
எனவே இதை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கிறோம்.
மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர்’ என்றார்.
இதனையடுத்து ரஜினியின் காலா மற்றும் 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.