தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 3 வாரங்களாக அதாவது மார்ச் 1 முதல் தமிழகத்தில் எந்த ஒரு புதிய சினிமாவும் ரிலீஸ் ஆகவில்லை.
டிஜிட்டல் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது.
இந்த வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது.
இதனால் திரைத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
மார்ச் மாத ரிலீஸ் செய்யப்பட வேண்டிய 30 படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஸ்டிரைக் முடிந்த உடன் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவிருந்த ரஜினியின் காலா திரைப்படம் மே மாதத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது தொடர்பாக காலா படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.
அதன்படி காலா வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாம் அதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லைகா.
இதே நிறுவனம்தான் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள கரு படத்தை தயாரித்துள்ளது.
எனவே அந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடவிருக்கிறார்கள்.
Kaala release may postponed So Lyca likely to release Karu movie