தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’ திரைப்படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
தமிழகமெங்கும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முதலே ஆரம்பமானது.
திரையரங்குகளுக்கு முன்பிருந்த பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம், பூஜைகள் செய்தனர்.
மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை காண என இயக்குனர் ரஞ்சித் தியேட்டர்களுக்கு நேரிடையாக சென்றிருந்தார்.
இதுகுறித்து ரஞ்சித் கூறும்போது…
‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம்.
இங்கே மக்களிடையே ஈக்குவாலிட்டி இல்லை. அதைதான் சொல்லியிருக்கிறேன்.
நான் இயக்குனர் என்பதை விட நான் ஒரு அரசியல்வாதிதான். என் படங்களில் எப்போதும் அரசியல் இருக்கும்.
கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
Kaala for the problems of land less peoples not for Rajini says Ranjith