மீண்டும் ரீல் லைஃப்பில் இணையும் ரியல் ஜோடி சூர்யா – ஜோதிகா

மீண்டும் ரீல் லைஃப்பில் இணையும் ரியல் ஜோடி சூர்யா – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் இணைந்த நடித்த ஜோடி சூர்யா ஜோதிகா.

பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த போது காதல் மலரவே இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த ஜோடியை மீண்டும் இணைக்கவுள்ளார் பாலா.

ஏற்கெனேவே நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் சூர்யாவை இயக்கியிருந்தார் பாலா. அதுபோல நாச்சியார் படத்தில் ஜோதிகாவை இயக்கியிருநதார்.

Suriya and Jyothika joins for a new film

FILMISTREET அன்றே சொன்னது..: RRR-க்கு வழிவிட்டு ஒதுங்கிய DON..; சிவகார்த்திகேயனுக்கு லைகா நன்றி

FILMISTREET அன்றே சொன்னது..: RRR-க்கு வழிவிட்டு ஒதுங்கிய DON..; சிவகார்த்திகேயனுக்கு லைகா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டான்’.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர் படக்குழு.

ஆனால் இதே மார்ச் 25ல் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்தனர்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளதால் டான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என நாம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன்படி ‘டான்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியாக மே 13-ம் தேதி என நேற்று அறிவித்துள்ளது லைகா. இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது லைக்கா.

Sivakarthikeyna’s Don postponed because of RRR release

பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அந்தாதூன்.

இந்த படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து அவரது அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.

இதில் பிரசாந்த் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

இவர்களுடன் சிம்ரன், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை அசுரன் பட தயாரிப்பாளர் தாணு பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

1992ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து வெளியான ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தை தயாரித்து வெளியிட்டவர் தாணு.

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ‘அந்தகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Kalai Puli S Thanu to release Prashanth’s Andhagan

மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை அனுஷ்கா.

இவர் தமிழில் ரஜினியுடன் லிங்கா, விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 மற்றும் சிம்புவுடன் வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களிலும் நடித்து இந்தியளவில் பிரபலமாகவுள்ளார்.

இந்த நிலையில் இவர் விரைவில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளதாம்.

இந்த படம் நாயகியை மையப்படுத்திய கதை என கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அனுஷ்கா நடித்திருந்தார்.

இந்த இரு படங்களிலும் விக்ரம் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka and Vijay joins for a new film

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ல் வெளியானது. நிறைய அஜித் ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லையாம்.

இதனால் கலவையான விமர்சனங்களே வந்தன. முதல் 3 நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருந்துள்ளது.

தற்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் நடிகர் அஜித்,

முழுக்க முழுக்க நரைத்த தாடி… நரைத்த தலை முடி என லுக்கில் இருக்கிறார் இவர்.

இந்நிலையில் தன் மகன் ஆத்விக்கிற்கு பிறந்தநாளை தன் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் நேற்று மார்ச் 2ல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அஜித்தின் மச்சானும் நடிகருமான ரிச்சர்ட்டும் கலந்துக் கொண்டுள்ளார்.

தன் குடும்பத்தாருடன் அஜித் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரகீறது.

தன் அடுத்த பட AK 61 பட லுக்கிலேயே அஜித் இந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith look from Aadvik birthday party

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில்

“25 ஆண்டுகளாய் யுவன்”-நிகழ்ச்சியில் பாடகர்கள்:

விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் “ஆண்டிப்பட்டி கணவாக் காத்து” பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு, சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய இசை நிகழ்வை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

*இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது….*

இவ்வளவு நாள் என்னோட பயணம் அனைத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும், என்னோட வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி.

என்னுடன் பிரம்மா இருப்பார் இப்போது அவர் இல்லை அது வருத்தம் தான். என்னை இயக்கி கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம், ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி.

நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன்.

இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி.

இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை. முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது.

யாராவது வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் “அங்க பாரு.. யுவன் அம்மா என்றார்கள்” ஓகே நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.

அம்மாவை உண்மையில் நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி. இசைத்துறையில் நான் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன் லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன் முடியாதது வருத்தம் தான்.

நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.

நடிகர் விஜய் சாருடன் இருக்கும் ஜகதீஷ், ஒரு போட்டோ அனுப்பியிருந்தார். அதில் விஜய் சார் மகன், யுவனிசம் டீசர்ட் போட்டிருந்தார், பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார், அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தி குறித்து போட்ட டீசர்ட் குறியீடு கிடையாது, உண்மையிலேயே எனக்கு இந்தி தெரியாது அது தான், அதில் கருத்து எதுவும் இல்லை. நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன் என் மனைவி தான் இருப்பார் என்னைப்பற்றி விசயங்களை காட்டும் போது, சந்தோஷமாக இருக்கும். எனக்கு படத்தை விட ஃபேமிலி தான் சந்தோசம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன்.

25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம், நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன்.

என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்க போகிறேன்.

ரஜினி சார் படத்திற்கு இசையமைக்க நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும் என நம்புகிறேன் நன்றி.

Yuvan Press Meet on completing 25 years of the musical journey

More Articles
Follows