‘பரிதாபப் பார்வை வேண்டாம்’ – நா.முத்துக்குமாரின் தம்பி கடிதம்

‘பரிதாபப் பார்வை வேண்டாம்’ – நா.முத்துக்குமாரின் தம்பி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

na muthukumar brother ramesh kumarஇரண்டு தேசிய விருதுகளை அள்ளிய திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அண்மையில் காலமானார்.

இவரது மறைவு பல்வேறு தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே இவரின் மரணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதில் சில தவறான தகவல்களும் கூறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அவரது சகோதரர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்…

அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்கு பிறகு ஆன ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்…

அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான்.

கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.

ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது.

எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தன.

எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம்.

எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறான்.
அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது.

அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது.

அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம்.

தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.

இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன்.

பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம்.

அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.

ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம்.

எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை.

உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான்.

அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன்.

அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன.

தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக ‘தரமணி’யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான்.

இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.

சுஜாதாவின் ”நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்” என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன.

மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.”

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் 60 அப்டேட்ஸ் : நாளை முதல் தளபதி அதிரடி

விஜய் 60 அப்டேட்ஸ் : நாளை முதல் தளபதி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay artதெறி படத்தை தொடர்ந்து, விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

பரதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

இதில் விஜய் சம்பந்தப்பட்ட அதிரடியான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் பரதன்.

அஜித்துக்கு கோடி கோடியாய் கொடுக்க நயன்தாரா ரெடி?

அஜித்துக்கு கோடி கோடியாய் கொடுக்க நயன்தாரா ரெடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith nayantharaஅண்மைகாலமாக திரைத்துறையின் எந்த துறையில் ஒருவர் இருந்தாலும் அவர்கள் வர நினைக்கும் துறையாக தயாரிப்பு துறை இருக்கிறது.

நாமும் படங்களை எடுத்து ஒரு தயாரிப்பாளராகிவிட வேண்டும் என பலரும் முயற்சித் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் விரைவில் நயன்தாராவும் இணைவார் என்றே தெரிகிறது.

விரைவில் இவர் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

எனவே, அஜித்தின் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடி தரவும் தயாராக இருக்கிறாராம் நயன்தாரா.

தல என்ன செய்ய போகிறாரோ?

‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhan karkyபிரபலங்கள் என்றாலே அவர்களது மரணம் கூட ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும்.

அண்மையில் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் காலமானார்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாகவும், செலவுக்கு பணம் இல்லாததால் மரணம் அடைந்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்தன.

மேலும் அவருடையை குடி பழக்கமும் ஒரு காரணம் என தகவல்கள் வருகின்றன.

இதனை முற்றிலும் மறுத்துள்ள மற்றொரு பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளதாவது…

“அவர் மறைந்தாலும், அவர் எழுதிச்சென்ற பாடல்கள் இரண்டு வருடத்திற்கு வெளிவரும்” என்றார்.

‘எங்களை எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்களே…’ நயன்தாரா நாணம்

‘எங்களை எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்களே…’ நயன்தாரா நாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaவிக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் தொடங்கியது முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்டது.

மேலும் பல விழாக்களுக்கும் இருவரும் ஒன்றாக சென்று வந்தனர்.

இந்நிலையில் ஒரு பிரபல சேனல் ஒளிப்பரப்பிய விருது வழங்கும் விழாவில் இருவரும் நானும் ரவுடிதான் படத்திற்காக விருதுகளை பெற்றனர்.

அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது, நயன்தாராவின் பெயரை தொகுப்பாளர்கள் மிர்ச்சி சிவா மற்றும் சதீஷ் மாறி மாறி கூறிக் கொண்டே இருந்தனர்.

அதன்பின்னர் நயன்தாரா பேசும்போதும் இதே போன்று செய்தனர்.

நான் அவரு பெயரை சொல்லலாமா? என்று கேட்டுவிட்டு ‘எங்களை தான் எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்க… ? என்று நாணத்துடன் கூறினார் நயன்தாரா.

அப்போது அரங்கமே சிரப்பலையில் அதிர்ந்தது.

விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கரின் விருந்து

விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கரின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarபெரும் எதிர்பார்ப்பில் உருவான ரஜினியின் ‘கபாலி’ படம் 25வது நாளை கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விரைவில் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

தற்போது இதன் டீசர் எடிட்டிங் பணி நடைபெற்று வருகிறதாம்.

எனவே மிகவிரைவில் இதன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவிருக்கிறதாம்.

இது ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் தரும் மாபெரும் விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows