தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது-
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவிற்கு வழக்கம்போல நயன்தாரா வரவில்லை.
இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது…
ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது. பின்னர் கஜினி படம் பார்த்தேன்.
அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்தார். ஒரு ஒன் லைன் சொன்னார். ஆனால் அதை திரைக்கதையாக அமைக்க 3 மாதம் வேண்டும் என்றார். மேலும் கஜினி இந்தி படத்தை இயக்கி வருவதாக கூறினார்.
அப்போது நான் சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் எந்திரன் படம் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
இப்போதுதான் தர்பார் படம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.
இயக்குநர் பாலசந்தர் ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என நினைத்தார். எனக்கு அந்த பெயரை வைத்தார்.
அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.
ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அந்த நம்பிக்கை காப்பாற்றியுள்ளேன். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.
தற்போது நெகட்டிவ்வாக பேசிறார்கள். அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள்.
ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம். என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், 70வது பிறந்தநாள். ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
I wont disappoint peoples trust on me says Rajini at Darbar event