தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி தனுஷ் தயாரித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் எதிர்ப்புகள் வந்தாலும் உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்புக்கான காலா பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.
இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது….
காலா படத்திற்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மேலும் நான் மதிக்கும் தேவகௌடா அவர்கள் இது குறித்து பேசுவார் என நம்புகிறேன்.
இந்த எதிர்ப்பு கம்மிதான். நான் இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்.
படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்க்க போகிறார்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்.
சினிமா வேற அரசியல் வேற. இரண்டையும் எப்போதும் இணைத்து பார்க்கக்கூடாது” என ரஜினி ஓபனாக பேசினார்.
I expected more opposition for Kaala movie Rajinikanth open talk