தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில இயக்குனர்களை கமர்ஷியல் இயக்குனர்கள்… ஆக்சன் இயக்குனர்கள்.. ரொமான்டிக் இயக்குனர்கள் என வரிசைப்படுத்துவோம்.
அதுபோல இயக்குனர் கதிர் என்றால் காதலர்களின் இயக்குனர் என சொல்லலாம்.
காதல் தேசம், இதயம், உழவன், காதலர் தினம், காதல் வைரஸ்… என காதல் மய்யமாகவே பல படங்களை இயக்கியிருக்கிறார் கதிர்.
பல வருட இடைவெளிக்குப்பின், தற்போது மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
‘காதல் தேசம்,’ ‘இதயம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கதிர் இயக்குவார் என தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கதிர்.
புதுமுகம் கிஷோர் என்பவரை தன் பட நாயகனாக்கி டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த படத்தை ஆர்கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ரங்கநாதன் தயாரிக்கிறார்.
விரைவில் சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.
Hit director Kathir’s next film announcement is here