முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் அப்பாஸ்…?

முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் அப்பாஸ்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அப்பாஸ்.

1996 இல் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

முன்னணி நடிகராகவும், இரண்டாம் நாயகனாகவும், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் கூட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு சிறிய விபத்துக்குப் பிறகு அவரது வலது காலில் காயம் அடைந்தார்.

அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து, மருத்துவமனையில் குணமடையும் பாதையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களின், பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அப்பாஸ்.

Abbas underwent knee surgery

யாருடா நீ.. இத்தனை நாள் எங்க இருந்த.? சோமுவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஷால்

யாருடா நீ.. இத்தனை நாள் எங்க இருந்த.? சோமுவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார்.

இதில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும்.

அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இயக்குநர் சரவணன் திட்டமிட்டு இருந்தார்.

படப்பிடிப்பில் ஏனோ சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார்.

வீரமே வாகை சூடும்

ஆனால் சோமு சினிமாவுக்கு மிகவும் புதிது. அவர் சண்டைப் பயிற்சி மற்றும் இது போன்ற சாகச காட்சிகள் செய்வதில் பரிச்சயம் இல்லாதவர்.

இருந்தாலும் இயக்குநர் சரவணன் நடிகர் சோமுவிடம் இந்தக் காட்சியைப் பற்றி விளக்கிக் கூறிய பொழுது புதுமுக நடிகர் சோமு மிகுந்த ஆர்வத்துடனும் நான் இதைச் செய்கிறேன் என்று துணிச்சலுடன் முன்வந்தார்.

இந்தக் காட்சியைப் படம் பிடித்த பொழுது சோமு எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நீண்ட காட்சியில் நடிப்பதைப் பார்த்த விஷால் மிகவும் வருத்தப்பட்டார்.

உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து தன்னுடைய காரில் உள்ள தனது சொந்த பாதுகாப்பு சாதனங்கள், முன்புறம் போடும் பேட், பின்புறம் போடும் பேட் மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அதை தன் கையாலேயே சோமுவுக்கு அணிவித்துள்ளார். எந்தவித ஒரு பின்பலமும் இல்லாமல் ஒரு குணசித்திர நடிகராக வந்த தனக்கு ஒரு முன்னணி கதாநாயக நடிகரே தன் கையால் இதுபோன்ற உதவிகளைச் செய்ததைக் கண்ட சோமு, மிகவும் மனம் நெகிழ்ந்து போனார்.

அதுமட்டுமல்லாமல் அன்று முதல் அவர் விஷாலின் தீவிர ரசிகராக மாறினார். ரசிகருக்கும் ஒருபடி மேலே போய் விஷாலைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்.

வீரமே வாகை சூடும்

படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடைய ஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பரிசாகப் பெற்றார்.

படப்பிடிப்பு இடத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் நடிகர் விஷால், “யாருடா நீ இத்தனை நாள் எங்கடா இருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. ” என்று தன் மனதாரப் பாராட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

தன நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சோமு இப்பொழுது விஷாலின் அடுத்த படமான ‘லத்தி’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ என இரு படங்களிலும் ஒரு நல்ல வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சோமு, 2017 இல் வெளியான ‘வடசென்னை’ மற்றும் 2020 இல் வெளியான ‘சார்பட்டா’ படங்களிலும் சொல்லிக் கொள்ளும்படி சிறிய வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நடிகர் சோமு சினிமாவுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் வந்துள்ளார். கராத்தே பயிற்சி, குதிரை ஏற்றம், நீச்சல், நடனம், நடிப்பு பயிற்சி அனைத்தையும் பயின்று தேர்ச்சி பெற்ற பின் தான் களத்திற்கு வந்துள்ளார்.

ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.மேலும் நடிகர் சோமு ‘பொன்னியின் செல்வனி’ ல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நடக்காமலே போய்விட்டது என்று கூறுகிறார்.

தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக எப்படியாவது இயக்குநர் வெற்றிமாறன் எடுக்கும் வாடிவாசல் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்று தீராத முயற்சி செய்து வருகிறார்.

அதற்காக காலை மாலை ஜிம்முக்குச் சென்று தன்னுடைய உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக வேண்டும் என்பதையே தனது கனவாகக் கொண்டுள்ளார். நடிகர் சோமுவின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்..

வீரமே வாகை சூடும்

Actor Somu became very close to Vishal

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ஆரம்ப கால படங்களில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘சிட்டிசன்’.

இந்த படத்தில் மீனா நாயகியாக நடிக்க சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.

இந்த படத்திகற்கு ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தார் சரவணா சுப்பையா. ஆனால் அவை பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தற்போது பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் ‘சிட்டிசன்’ படம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில்… “சிட்டிசன் படத்தில் முதலில் கமலை நடிக்க வைக்க அணுகினேன்.. அவர் ‘ஹேராம்’ செய்துக் கொண்டிருந்தார்.

எனவே முதலில் காத்திருக்க சொன்னார். ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் முடியாமல் சூழ்நிலை ஏற்படவே அஜித் நடித்தார்.

அதே சமயம் அஜித்தின் மேக்கப்புக்கு பெரிதும் உதவியாக இருந்தார் கமலஹாசன்” என தெரிவித்துள்ளார் சரவண சுப்பையா.

நடிகர் அஜித்தும் தன்னுடைய முழு உழைப்பையும் அந்த படத்தில் கொட்டி இருந்தார்.. ஆனாலும்

ஒருவேளை கமல் நடித்திருந்தால் படத்தின் வெற்றியும் இந்திய அளவில் பேசப்பட்டிருக்கும். மேலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் கமல் கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

கமல் நடித்திருந்தால் அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தசாவதாரம், அவ்வை சண்முகி பட வரிசையில் கண்டிப்பாக ‘சிட்டிசன்’ இணைந்திருக்கும்.

கமல்

Do you know Before Ajith Who will be hero in Citizen

JUST IN அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன.; என்ன நடந்தது.?

JUST IN அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்.

இவரது ‘துணிவு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அஜித்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இது தொடர்பான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இத்துடன்..

“நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உங்களது பாசிட்டிவான வார்த்தைகளுக்கு நன்றி” என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan met Ajith Photo goes viral

—-

Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life ?? Thank you for all the positive words and wishes sir ❤️❤️?? https://t.co/yVaYIc3Ca5

‘வாரிசு’ சூட்டிங் விவகாரம்: ரிப்போர்ட்டரை கடத்தி மிரட்டிய டீம்.; ECR சரவணன் தலைமறைவு.; 3 பேர் கைது

‘வாரிசு’ சூட்டிங் விவகாரம்: ரிப்போர்ட்டரை கடத்தி மிரட்டிய டீம்.; ECR சரவணன் தலைமறைவு.; 3 பேர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு & தெலுங்கு இயக்குனர் வம்சி ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’.

விஜய் ராஷ்மிகா ஜோடியாக இணைந்து நடித்து வரும் இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

தற்போது இதன் சூட்டிங் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிய அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதே தகராறுக்கு வழிவகுத்து உள்ளது.

இதறால் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தி அவர்களை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து தாக்குதலை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்துடன் செய்தியாளர்களை மீட்டுள்ளனர்.

மேலும் செய்தியாளர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவுமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 7 பேர் மீது எப் ஐ ஆர் போட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இசிஆர் சரவணன் என்பவர் இந்த தகவலை அடுத்து தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

BREAKING விஜய் மீது பாயும் வழக்குகள்.: வனத்துறை & போக்குவரத்து துறை நோட்டீஸ்.; அபராதம் விதிப்பு

BREAKING விஜய் மீது பாயும் வழக்குகள்.: வனத்துறை & போக்குவரத்து துறை நோட்டீஸ்.; அபராதம் விதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் சமயபுரம் ஜெயா என்ற யானை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் யானையை கோயில் பூஜைக்கு கொண்டு செல்வதாக அவர்கள் பொய் சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனையடுத்து உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு.

மேலும்..

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நடிகர் விஜய் காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அபராதம் அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

More Articles
Follows