சிம்பு கைகொடுக்கல; மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் ஆதிக்ரவிச்சந்திரன்

சிம்பு கைகொடுக்கல; மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் ஆதிக்ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gv prakash adhik ravichandranஜிவி. பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இதனையடுத்து சிம்பு, தமன்னா நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆனால் இது எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

எனவே மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்தார் ஆதிக்.

இவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்திற்கு ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.

இந்நிலையில் ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்ற டைட்டிலுக்கு பதிலாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா-2’ என்று டைட்டிலை வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mahesh Babuஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் நாளை வெளியாகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மகேஷ்பாபு.

அவர் பேசும்போது….

‘தமிழகத்தில் பெரிய பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள். நான் யாருடனும் போட்டி போட இங்கு வரவில்லை.

‘ஸ்பைடர்’ படம் 125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்தால்தான் வசூலை ஈட்ட முடியும்.

அதனால் தான் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் என்று நான் பட்டங்களை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பட்டங்கள் மீது எனக்கு விருப்பமில்லை.

தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கேட்பதில்லை.

தமிழிலும் அதுபோன்ற பட்டங்களை வேண்டாம். எல்லோரும் என்னை நேசித்தால், ரசித்தால் போதும்.

இரண்டு மொழிக்கும் ஏற்ற கதைகள் இருந்தால் தமிழிலும் என் நடிப்பை தொடர்வேன்.” என்றார்.

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phonesகன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’.

சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.

கன்னடத்தில் 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறேன்.

இது என் 5வது படமாக உருவாகியுள்ளது.

தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இது வழக்கமான பேய் படமாக இருக்காது.

இன்று எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அதில் மெசேஜ் வழியாக பேய் வருகிறது.

அது மற்ற போன்களுடன் தொடர்பை ஏற்படுத்தி செல்கிறது என்கிற கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன்.’’ என்றார்.

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phones

ஸ்மூல் ஆப்ஸில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

ஸ்மூல் ஆப்ஸில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

smule senthilஸ்மூல் என்பது பாடலுக்கான செயலி (ஆப்ஸ்) ஆகும்.

இந்த செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துக் கொண்டால் நாம் அதில் உள்ள இசைக்கு ஏற்ப பாடி வீடியோவை ரெக்கார்டு செய்துக் கொள்ளலாம்.

அண்மைகாலமாக இதில் நிறைய ஆண்களும் பெண்களும் தங்களுக்கு பிடித்த பாடல்களை ஜோடியாக பாடி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை அதிலிருந்து நீக்க வேண்டும் என அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Ilayaraja songs should not be used in Smule App

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினிதான் சரியானவர்… கமல்

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினிதான் சரியானவர்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini is right person to have alliance with BJP says Kamalhassan2018 புத்தாண்டு தினத்தில் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை கமல் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

அவரும் இது தொடர்பான பேட்டிகளை பல்வேறு ஊடகங்களில் கொடுத்து வருகிறார்.

எனவே தினமும் கமல் பற்றிய ஒவ்வொரு செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டுள்ளனர்.

“ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர் ரஜினி. அவர்தான் அந்த பாஜக கூட்டணிக்கு ஏற்றவர்.

நான் பகுத்தறிவுவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்.

கம்யூனிசவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்” என கூறியுள்ளார்.

Rajini will be right person to have alliance with BJP says Kamal

ஆரவ்வை இப்பவும் காதலிக்கிறீங்களா? ஓவியா பதிலால் ஓ போட்ட ரசிகர்கள்

ஆரவ்வை இப்பவும் காதலிக்கிறீங்களா? ஓவியா பதிலால் ஓ போட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya aaravசென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா.

இந்நிகழ்வின் போது ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி ஆடல் பாடல் என அமர்க்களம் செய்து ரசிர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது சில ரசிகர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் இருந்த அனுயாவை ரொம்ப பிடிக்கும். அந்த நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை இருக்கிறது.

மேலும் ஒரு ரசிகர்… “ஆரவ்வை இன்னும் காதலிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

“எனக்கு உங்கள் அனைவரிடம் இவ்வளவு அன்பு இருக்கும் போது, ஏன் நான் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? உங்கள் அனைவரையும் காதலிக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டார் ஓவியா.

இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் ஓ என சத்தம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அட… ஓவியாவுக்கு நல்லா பேசவும் தெரிஞ்சிருக்கே…

Whether Oviya still love Aarav Here is the answer

oviya dance at omr

More Articles
Follows