தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெஃப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சம்பள பிரச்சினை எழுந்ததையடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.
மேலும் ரஜினியின் ‘காலா’, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
கடந்த 3 நாட்களாக பல்வேறு திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன.
ரஜினி சார் மற்றும் கமல் சார் போன்ற மூத்த கலைஞர்களும் எங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.
எனவே இது சம்பந்தமாக தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து ஓர் நல்ல முடிவு காண வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.
மேலும் பல அமைப்புகளும், பல்வேறு துறையினரும் வேண்டுகோள் வைத்த அடிப்படையில் நாளை முதல் பணிக்குச் செல்வது என முடிவெடுத்திருக்கிறோம்.
முதலில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார்கள். நாளை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் மட்டுமே பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.
நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எந்தவித நிபந்தனையும் வைக்க விரும்பவில்லை.
எங்களை பிளவுப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.
இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி தன் படங்களில் பெப்சி தொழிலாளர்களும் அந்த அமைப்பை சாராத தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.” என்றார்.
எனவே நாளை முதல் நிறுத்திக் வைக்கப்பட்ட காலா, மெர்சல் பட படப்பிடிப்புகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
FEFSI President RK Selvamani announced strike has been cancelled