‘என் முதல் மரியாதைக்குரிய ஹீரோ அவர்தான்…’ – ஜிவி.பிரகாஷ்

‘என் முதல் மரியாதைக்குரிய ஹீரோ அவர்தான்…’ – ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி வலம் வந்தவர் ஜி.வி. பிரகாஷ்.

தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு அதிரடியான படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என விஜய்யை வாழ்த்தி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது…

“ஆயிரம் துறைகள் பல லட்சம் சாதனையாளர்கள் எனினும் விவசாயி எப்போதும் கதாநாயகர்கள் முதல் மரியாதைக்குரியவர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

gvprakash tweet about farmers

இப்படி கன்ப்யூஸ் பண்றாங்களே… கபாலி மீது காண்டு ஆகும் ரசிகர்கள்.!

இப்படி கன்ப்யூஸ் பண்றாங்களே… கபாலி மீது காண்டு ஆகும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

இப்படம் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் ஜூலை 22க்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இத்தகவல் முக்கியமாக வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ‘கபாலி’ விளம்பரங்களில் ஜூலை 29-ம் தேதி உலகமெங்கும் வெளியீடு என்ற வாசகம் இடம்பெற்று உள்ளதாம்.

இது ஒரு புறம் இருந்தாலும் ‘கபாலி’ படத்தின் சென்சார் முடிந்தவுடன்தான் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறாராம் தாணு.

இதனால் ரிலீஸ் தேதி குறித்து மிகுந்த குழப்பத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

இயக்கிய படங்கள் 12; விருதுகள் 50; அசத்திய அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பிறந்தநாள்!

இயக்கிய படங்கள் 12; விருதுகள் 50; அசத்திய அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பிறந்தநாள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பயணிக்கும் சாதனையாளர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

இவரை மலையாள சினிமாவின் பிதாமகன் என அழைப்போரும் உண்டு.

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவற்றால் சமூகத்தில் பல மாற்றங்களை செய்ய முடியும் என தன் படங்களால் நிரூபித்தவர் இவர்.

இந்நிலையில் இவர் இன்று தனது 75 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.

இந்த 50 வருடங்களில் மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

இவரது முதல் படமான ‘சுயம்வரம்’ 1972ஆம் ஆண்டு வெளியானது.

மலையாள சினிமாவையே புரட்டி போட்ட படம் இது என்றால் அது மிகையல்ல.

முதல் படமே ஐந்து தேசிய விருதுகளை பெற்றது.

இதனை தொடர்ந்து கொடியேட்டம், எலிப்பத்தாயம் உள்ளிட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.

தாதாசாகேப் பால்கே, பத்மஸ்ரீ, 7 தேசிய விருது என 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இவரின் 12வது படமான பின்னேயும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்துள்ளனர்.

நயன்தாராவுடன் நடிக்க ஆசை; ஆனா இப்படி பண்றாங்களே..!

நயன்தாராவுடன் நடிக்க ஆசை; ஆனா இப்படி பண்றாங்களே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர், சீனியர் என எந்த நடிகர் என்றாலும் ஈகோ பார்க்காமல் நடிப்பவர் நயன்தாரா.

ஆனால் ஜூனியர் நடிகர் என்றால் ஒரு நிபந்தனை விதிக்கிறாராம் இவர்.

அதாவது படத்தின் கதை தன்னை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதுதான் அது.

அப்படின்னா ஹீரோ கேரக்டர் கொஞ்சம் டம்மிதான்.

என்னடா இது நயன்தாராவுடன் ஜோடி போடலாம்ன்னு பார்த்தா இந்த பொண்ணு இப்படி குண்டை தூக்கி போடுதே என்று நொந்து கொள்கிறார்களாம் ஜூனியர்ஸ்.

 

 

 

 

‘ரஜினி செஞ்சா மட்டும்தான் பார்க்குறாங்க’ – அக்‌ஷய்குமார்

‘ரஜினி செஞ்சா மட்டும்தான் பார்க்குறாங்க’ – அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ’2.0’.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்பட அனுபவங்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார் அக்‌ஷய்குமார். அதில்…

“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அடிவாங்கிவது ஒரு சூப்பர் ஸ்டாரிடம் என்பதால் இப்படி உணர்கிறேன்.

ரஜினி சார் என்ன செய்தாலும் அது ஸ்டைல்தான்.

ஒருமுறை நான் ரஜினி சார், ஷங்கர் சார் மற்றும் படக்குழுவினர் ஒரு இடத்தில் இருந்தோம்.

ரஜினி சார் அவர் கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தார். அப்போது தன் சட்டை மேல் இருந்த தூசியை தட்டிவிட்டார்.

அவர் தட்டிவிட்டது கூட ஸ்டைல்தான். அதை அனைவரும் ரசித்தனர்.

ஆனால் அதுபோல் நான் செய்தபோது யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதுபோல் ஷங்கர் அவர்களை பற்றியும் சொல்ல வேண்டும்.

அவர் டைரக்டர் அல்ல. சயின்ஸ்ட். ஏதாவது ஒரு புதுமைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.” என்றார் அக்‌ஷய்குமார்.

ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுத்த ரஜினி-விஜய் பட வில்லன்..!

ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுத்த ரஜினி-விஜய் பட வில்லன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனை வருடம் ஆனாலும் நாம் வியந்து பார்க்கும் படங்களில் ஒன்று ‘ஜூராஸிக் பார்க்’.

இப்படத்தை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

இவர் அண்மையில் இயக்கியுள்ள ‘The BFG’ என்ற ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இதிலும் வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

இந்தியாவிலும் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் முக்கிய குரல் கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு.

இவர் ரஜினிக்கு வில்லனாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர்.

தற்போது ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows