கொரானா பீதியிலும் இணையத்தை அதிர வைத்த ராஜமௌலியின் RRR

கொரானா பீதியிலும் இணையத்தை அதிர வைத்த ராஜமௌலியின் RRR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Rajamoulis RRR motion poster goes viralபாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள படம் ஆர்ஆர்ஆர்.

இதில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று(மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டரை ஐந்து வெவ்வேறு யு-டியூப் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மொழியிலும் ஆர்ஆர்ஆர் என்பதற்காக விரிவாக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

தமிழில் ஆர்ஆர்ஆர் என்பதற்கு ரத்தம், ரணம், ரௌத்திரம் எனப் பெயரிட்டுள்ளனர்.

படத்தில் 2 ஹீரோக்கள்.. ஒருவருக்கு நீரையும் மற்றொருவருக்கு நெருப்பையும் பின்பலமாக வைத்துள்ளனர்.

அதனை வைத்தே படத்தின் போஸ்டர் முதல் மோசன் போஸ்டர் வரை காட்சிகள் உள்ளன.

ஆக நீருக்கும் நெருப்புக்கும் உள்ள பகையா? அல்லது நட்பா என்பதை அடுத்த வருடம் காத்திருந்து தெரிந்துக் கொள்வோம்.

தற்போது கொரோனா பீதியில் இந்திய மக்கள் இருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் இந்த மோசன் போஸ்டர் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

Directors Rajamoulis RRR motion poster goes viral

BREAKING இந்தியா 144 உத்தரவு.; பதவி இழப்பார் மோடி என கமல் எச்சரிக்கை

BREAKING இந்தியா 144 உத்தரவு.; பதவி இழப்பார் மோடி என கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams Modis announcement of 21 days India lock down கொரோனா என்ற கொடிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் உலகமெங்கும் லட்சணக்கனக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணனக்கானவர்களின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000-ஐ கடந்து விட்டது.

4,07,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ஷாக் கொடுத்த 3 ஸ்டார்ஸ்

இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536ஆக உயர்ந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பில் ஈடுப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து இன்று மார்ச் 25 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 வரை அதாவது 21 நாட்கள் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சை்ககான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிறது ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.

மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம்.

ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார்.

இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kamal slams Modis announcement of 21 days India lock down

https://twitter.com/ikamalhaasan/status/1242505185018007553

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ஷாக் கொடுத்த 3 ஸ்டார்ஸ்

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ஷாக் கொடுத்த 3 ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 Stars surprises Rajini in Into the Wild show at Discovery Channel ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி தொடர்பான படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன் காட்டுக்குள் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது நேற்று மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பானது.

இதில் ரஜினி செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கண்டுகளித்தனர்.

ரஜினியின் வேறொரு பரிமாணத்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டமைக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்த வாழ்த்து வீடியோவும் அதில் இணைக்கப்பட்டு இருந்தன.

நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

’எந்த ஆபத்து வந்தாலும் உங்களை ஒன்றும் செய்யாது. ஏனெனில் ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான், அடித்து தூள் கிளப்புங்க’ என நடிகர் மாதவன் வாழ்த்தினார்.

ரஜினியுடன் ’2.0’ படத்தில் நடித்த பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமாரும் அச்சமின்றி உங்கள் பயணத்தை தொடங்குங்கள் உங்கள் வழி தனி வழி’ என தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

3 Stars surprises Rajini in Into the Wild show at Discovery Channel

உதவியாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுத்த பிரகாஷ்ராஜ்.; ஏன் தெரியுமா.?

உதவியாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுத்த பிரகாஷ்ராஜ்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prakash Raj kindness towards his employeesகொரானா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் என்பதால் அனைத்து நடிகர்களுக்குமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் தன் உதவியாளர்கள் பலருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது..

“நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை இப்போதே கொடுத்துவிட்டேன்.

என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. ” என கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் இந்த செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Actor Prakash Raj kindness towards his employees

சாரே கொல மாஸ்… திருமணத்தை எளிதாக நடத்தும் பேட்ட நடிகர்

சாரே கொல மாஸ்… திருமணத்தை எளிதாக நடத்தும் பேட்ட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta actor Manikandan changes his marriage plans due to corona pandemic‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஸ்டைலாக துப்பாக்கியை வைத்துக் கொண்டு சூட் செய்வார். அப்போது சாரே கொல மாஸ் என ரஜினியை பாராட்டியிருப்பார்.

இவர் மலையாள சினிமாவில் மிகப்பிரபலமானவர்.

’கம்மாட்டிபாடம்’ என்ற மலையாள படத்தில் நடித்து அந்த மாநில விருதை வென்றவர் இவர்.

இந்த நிலையில் மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் அடுத்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

தன் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் தற்போது இந்தியாவையே முக்கியமாக கேரளாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தன் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

Petta actor Manikandan changes his marriage plans due to corona pandemic

தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்?; அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ட்ரீட்

தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்?; அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master release may postponed to Ajith Birthdayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கபட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகமெங்கும் மார்ச் 31ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மேலும் கொரோனா பீதியில் இருந்து மக்கள் இயல்பு திரைக்கு திரும்ப வர சில நாட்களாவது ஆகும். எனவே மாஸ்டர் ஏப்ரல் முதல் வாரம் வெளியானால் அது வசூலை பாதிக்கும் எனத் தெரிகிறது.

இதனால் மே 1ஆம் தேதி மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சொன்னது போல நண்பர் அஜித் பிறந்தநாளில் மாஸ்டர் வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தானே.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் பட டிரைலரை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijays Master release may postponed to Ajith Birthday

More Articles
Follows