கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராம் சரண். இவர் நடிக்க வருவதற்கு முன்பே பிரபலம் தான்.

ஏனென்றால் இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு…’ என்ற பாடல் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட்டர் வீராட் கோலி பயோபிக்கில் தனக்கு நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“வீராட் கோலி கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவர் ஊக்கமளிக்கும் நபர். மேலும் நானும் அவரைப் போலவே இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார் ராம்சரண்.

RRR actor wants to act in Virat Kohli biopic

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு தன் காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

சில மாதங்களாகவே குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இது இவரின் 75வது படமாக உருவாகியுள்ளது.

இதில் நயன்தாரா உடன் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைகின்றனர்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் மீண்டும் இணைகின்றனர்.

காமெடியன் ரெடின் கிங்ஸ்லியும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் & டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்..

ஷாருக்கான் உடன் ‘ஜவான்’ & ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’ ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Nayanthara 75 movie updates here

படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ குழு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை மீண்டும் சேணத்தில் வைத்திருக்கும் பயணம் RC15 நோக்கி” என்று எழுதி இருந்தார்.

A journey that has me back to back in the saddle! Towards #RC15
https://t.co/spv0c18y9R

Director Shankar back on the sets of ‘RC15’

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதியை நடிக்க வைக்கும் தனது அடுத்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளை மிஷ்கின் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் படத்தைப் பற்றி நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம், இப்போது இந்த ஆண்டு மே முதல் வாரத்தில் தயாரிப்பாளர், இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையா மற்றும் பூர்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Director Mysskin’s next film with Master actor

அஜீத் பட இயக்குனருடன் கை கோர்க்கும் அதிதி ஷங்கர்!

அஜீத் பட இயக்குனருடன் கை கோர்க்கும் அதிதி ஷங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பில்லா’ புகழ் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும், முன்னணி ஹீரோ அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாக உள்ளார். ‘மாஸ்டர்’ புகழ் தளபதி விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஆகாஷ் முரளி சேவியர் பிரிட்டோவின் மருமகன் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Aditi Shankar joins hands with Ajith film director

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் வைரம் தங்க நகைகள் கொள்ளை.; எந்த வீட்டு லாக்கர்.? போலீசார் விசாரணை

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் வைரம் தங்க நகைகள் கொள்ளை.; எந்த வீட்டு லாக்கர்.? போலீசார் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் 3 & வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.

சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Aishwarya Rajinikanth’s jewels stolen. case filed

More Articles
Follows