தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராம் சரண். இவர் நடிக்க வருவதற்கு முன்பே பிரபலம் தான்.
ஏனென்றால் இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு…’ என்ற பாடல் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ளார்.
இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட்டர் வீராட் கோலி பயோபிக்கில் தனக்கு நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“வீராட் கோலி கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவர் ஊக்கமளிக்கும் நபர். மேலும் நானும் அவரைப் போலவே இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார் ராம்சரண்.
RRR actor wants to act in Virat Kohli biopic