தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘தமிழ்ப் படம்’.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்கள் மற்றும் சிறந்த காட்சிகள் அனைத்தையும் கிண்டல் செய்திருந்தனர்.
இப்படத்தை திரையுலக பிரபலங்கள் கடுமையாக விமர்சித்தாலும், ரசிகர்கள் ஆதரித்தனர்.
அதன்பின்னர் ‘இரண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். அப்படம் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது ‘தமிழ்ப்படம்’ 2-ம் பாகம் தொடங்கப்பட்டுள்ளதாக சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
இதிலும் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க சஷிகாந்த் தயாரிக்கவுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் கூறுகையில்…
ஆமாம். தமிழ்ப்படம் 2.0 ஆரம்பமாக உள்ளது. இப்படத்திலும் லிவிங் லெஜண்ட் சிவா நடிக்கிறார்.
இதன் பயிற்சிக்காக சிவா பேங்காக் செல்கிறார். ஆனால் ஏன்? எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள்.” என்றார்.
இது உலக மகா நடிப்புடா சாமி என சொல்லத்தோன்றுகிறதா? அதேதான்.
Director CS Amudhan clarifies about TamizhPadam2
C.S.AmudhanVerified account @csamudhan
And finally… #TP2PointO #TamizhPadam2