ரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்

ரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip 2 teamகோச்சடையான் படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 படத்தை இயக்கவிருக்கிறார் சௌந்தர்யா ரஜினி.

இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் ரஜினிகாந்த்.

இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் மின்சார கனவு படப்புகழ் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்கிறார்.

இன்றைய பூஜையில் லதா ரஜினிகாந்த், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரஜினி-விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணைந்த பாடகர்

ரஜினி-விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணைந்த பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith songஅஜித் நடிப்பில் வளர்ந்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் பாடியிருக்கிறாராம்.

இவர் ரஜினியின் ‘எந்திரன்’, விஜய்யின் குருவி மற்றும் தனுஷின் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இவர் அஜித் படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா முடிவால் அப்செட் ஆன ரசிகர்கள்

சூர்யா முடிவால் அப்செட் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (‘எஸ் 3’) படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

எனவே படத்தை திரையில் பார்க்க ஆவலாக ரசிகர்கள் இருந்தனர்.

முதலில் இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என பரபரப்பாக வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள்.

அதன்பின்னர் டிசம்பர் 23 படம் ரிலீஸ் என்றார்கள்.

தற்போது அந்த தேதியும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக சூர்யா அறிவித்துவிட்டார்.

எங்களது முயற்சிகளையும் மீறி எதிர்பாரா விதமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுவும் நன்மைக்கே என்று கருதி இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் என்ன காரணம் என்பதை தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அப்செட் ஆக உள்ளனர்.

பாகுபலி-பைரவா பாடல்களுக்கு உள்ள ஒற்றுமை

பாகுபலி-பைரவா பாடல்களுக்கு உள்ள ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa baahubaliவிஜய் நடித்துள்ள பைரவா படப் பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் ஆகியவற்றால் தமிழகம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மிக எளிமையாக வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமாக லஹரி நிறுவனம் பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களின் பாடல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ உரிமைகளை இந்நிறுவனமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lahari Music may acquire the right of Bairavaa Audio

ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு

ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya dhanushசினிமாவில் உள்ள பல துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

எனவே அவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட வேண்டும் என ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார்.

இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் 64வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் பிரிவையும் சேர்க்க அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்து விட்டாராம்.

மேலும் ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒளிப்பதிவாளர் ஆகியவற்றுக்கும் இனி தேசிய விருது வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய ‘சினிமா வீரன்’ என்ற குறும்படத்தை ஐஸ்வர்யா இயக்கி வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கமலின் கனவை நிறைவேற்ற கைகொடுக்கும் லைக்கா

கமலின் கனவை நிறைவேற்ற கைகொடுக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal will start Marudhanayagam soonஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவுப்படம் இருக்கும்.

கமல்ஹாசனின் கனவுப்படம் மருதநாயகம் என்பது நாம் அறிந்ததே.

கடந்த 1997ஆம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் இப்படத்தை தொடங்கி வைத்தார்.

முதல் 30 நிமிடம் படம் தயாரான நிலையில் படத்தின் பட்ஜெட் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் கமல் பல படங்களில் நடித்து இயக்கினாலும் மருதநாயகம் நிலை அப்படியே இருந்தது.

இந்நிலையில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ள கமல், லைக்கா நிறுவன சேர்மன் சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அப்போது அவர்கள் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு இப்படம் மீண்டும் உயிர் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

More Articles
Follows