தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்-ரஞ்சித்-தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் மும்பை கேங்ஸ்டர் படம் காலா.
இப்படம் மும்பையில் வாழ்ந்த நெல்லைத் தமிழர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்படம் அடுத்த 2018 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், காலா படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது என்றும் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரவே, அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட கோர்ட், மனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.