ஒரே நாளில் ‘சந்திரமுகி 2’ பட ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் படைத்த சாதனை

ஒரே நாளில் ‘சந்திரமுகி 2’ பட ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில், எம் எம் கீரவாணியின் இசையில் வெளியான இந்த பாடல் ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.

சந்திரமுகி 2

‘Chandramukhi 2’ movie SWAGATHAANJALI song Crosses 3 Million Views just 1 day

தமிழ்நாட்டில் மட்டும் JAILER ஐந்து கோடி நஷ்டம்.; அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

தமிழ்நாட்டில் மட்டும் JAILER ஐந்து கோடி நஷ்டம்.; அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலகமெங்கும் வெளியானது.

ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த படம் வெளியானது.

அனிருத் இசை அமைத்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரப், சுனில் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

அதற்கு ஏற்ப வசூல் வேட்டையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜெயிலருக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளதால் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை செய்து வருகிறது.

ஆகஸ்டு 10 வியாழக்கிழமை எந்த ஒரு பண்டிகை தினமும் விடுமுறை தினமும் இல்லை. ஆனாலும் படத்திற்கு டிக்கெட் எங்குமே கிடைக்கவில்லை என்பது ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

நமது அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட்டது .

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடியை படம் வசூலித்துள்ளது. ஒருவேளை தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ரூ 30 கோடியை இந்த படம் எட்டி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே முதல் நாளில் சிறப்பு காட்சி இல்லாததால் 5 கோடி நஷ்டத்தை ஜெயிலர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எங்கும் இல்லாத அளவிற்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்து வருவதால் ரஜினி ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும் படக்குழுவினரும் விநியோகஸ்தர்களும் என திரையுலகமே மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Rajinis Jailer lost 5 crores in TN Box office

ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம்.

 உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

ரஜினிகாந்த்

அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார்.

தற்போது ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ என இருப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த ரஜினி புதன்கிழமை தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்டின் ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்

rajini visit swamy dayananda saraswathi ashram during himalayas trip

‘மாவீரன்’ மதன் உருவாக்கிய ‘நூடுல்ஸ்’.; விற்பனை செய்யும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

‘மாவீரன்’ மதன் உருவாக்கிய ‘நூடுல்ஸ்’.; விற்பனை செய்யும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன்.

அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) திரு.அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதை நாயகனாக நடித்திருக்கிறார்.

‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடிக்க, ‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார். வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நூடுல்ஸ்

இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது…

“இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’. இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த ‘நூடுல்ஸ்’ படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது எனவும், குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது எனவும் கூறினார்.,

சமீபமாக வெளியான ‘போர்த்தொழில்’, ‘குட்நைட்’ படங்கள் வரை நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்து கொண்டாடிய ரசிகர்கள் ‘நூடுல்ஸ்’ திரைப்படத்திற்கும் அதே வரவேற்பைக் கொடுப்பார்கள் என்று ‘நூடுல்ஸ்’ சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட முன்வந்துள்ளது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது.

வரும் செப்-1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் இயக்குநர் நடிகர் அருவிமதன்.

நூடுல்ஸ்

Actor Aruvi Madhans debut directorial Noodles

ரஜினிக்கு வாழ்த்து.; ஜெயிலருக்கு முதல்வர் பாராட்டு.; நெகிழ்ச்சியில் நெல்சன்

ரஜினிக்கு வாழ்த்து.; ஜெயிலருக்கு முதல்வர் பாராட்டு.; நெகிழ்ச்சியில் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் நேற்று வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.

நெல்சா நீ ஜெயிச்சிட்ட.. தலைவர் நிரந்தரம்.. என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘ஜெயிலர்’ படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திரையரங்கில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்தபின் இந்த படத்தின் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

முதல்வர் தன்னை நேரில் பாராட்டியதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார் நெல்சன்.

மேலும் :ஜெயிலர்’ படத்தின் மெகா வெற்றிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் முதல்வரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு ரஜினி நன்றி தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

TN CM Stalin appreciated Jailer Rajini and Team

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில்
‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Swagathaanjali first single from Lycas Chandramukhi 2 released

More Articles
Follows