தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் அண்மையில் புருனே நாட்டின் இளவரசியும் இவருக்கு ரசிகையாக மாறிவிட்டாராம்.
மன்னராட்சி நடைபெறும் புருனோ நாட்டில், ஒரு விருந்து விழாவில் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்க, அப்பாடலை கேட்டு மெய் மறந்தாராம் இளவரசி.
மேலும் தனது மெய்க்காப்பாளர்களடம் அஜித்தை பற்றி விசாரித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது புத்தாண்டு விருந்துக்கு அஜித்தை அழைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
ரத்தினக் கம்பள வரவேற்பு, வைரங்கள் பதித்த சிம்மாசனம் என பிரமாண்ட வரவேற்புகள் தடபுடலா செய்யப்பட உள்ளதாம்.
ஆனால், அஜித் கலந்து கொள்வாரா? இளவரசியுடன் விருந்து உண்பாரா? என்பதுதான் தெரியவில்லை.