தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
60 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவுக்கே கலங்கரை விளக்கமாக சென்னையே இருந்தது.
சென்னையில் மட்டும் ஏவிஎம், விஜய வாஹினி, ஜெமினி, கற்பகம், சத்யா உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட ஸ்டூடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கு கன்னடம் மலையாள சினிமா படப்பிடிப்புகள் சென்னையை விட்டு அவரவர் மாநிலத்திற்கு சென்ற போது ஒவ்வொரு ஸ்டியோக்களாக மூடப்பட்டன.
மேலும் சிலர் அவுட் டோர் சூட்டிங்குக்காக வெளிநாடுகள் பறப்பதால் இருக்கிற ஸ்டூடியோக்களும் வேலை இல்லாமல் போனது.
பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்ட போதும் ஏவிஎம் ஸ்டூடியோ மட்டும் சினிமாவுக்காக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
அங்கும் மெல்ல மெல்ல அவ்வப்போது மாற்றங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
ஸ்டூடியோவுக்குள் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை உருவானது.
அண்மையில் கொரோனா ஊரடங்கால் ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டரும் மூடப்பட்டுள்ளது.
அங்கும் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவது குறைந்து வருகிறது. மேலும் டப்பிங் பணிகளும் குறைந்துள்ளன.
இதனையடுத்து ஏவிஎம் கார்டனை திருமண மண்டபமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கார்டனில் நடிகர் யோகிபாபு நடித்த மண்டேலா என்ற படத்தின் படப்பிடிப்பு தான் கடைசியாக நடைபெற்றதாம்.