வசந்தபாலன் & ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ஹீரோவாகும் ‘கைதி’ பட வில்லன்

வசந்தபாலன் & ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ஹீரோவாகும் ‘கைதி’ பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

G.V.பிரகாஷ்குமார் & வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.

வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.

வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன்,இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய வசந்தபாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்தபாலனின் படைப்பான ‘அநீதி’, ஜீன் மாதம் வெளியாகவுள்ளது. ‘அநீதி’ வெளியீட்டிற்குப் பின் திறமையுள்ள புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தி படங்களை தயாரிக்கவுள்ளது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்தபாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Arjun Das becomes hero in Vasantha Balan’s next film

சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த நாயகன் வருகிறார்

சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த நாயகன் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் குடும்பம் ஒரு நட்சத்திர குடும்பம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிவாஜியின் மகன் பிரபு ஏற்கெனவே பிரபலமான நடிகர். பிரபுவின் மகன் விக்ரம் தற்போது இளைய நடிகர்களில் ஒருவர்.

பாஜக-வில் இணையும் சிவாஜி கணேசன் மகன்.; சகோதரர் வாழ்த்து.!

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். இவரும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதுபோல ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் ஏற்கெனவே ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் உள்ளார்.

தற்போது ராம்குமார் கணேசனின், இன்னொரு மகன் தர்ஷன் என்பவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

மக்கள் கூடும் இடத்தில் சிவாஜிக்கு சிலை வேண்டும்… – நடிகர் சங்கம்

சினிமாவில் நடிப்பதற்காக நிறைய பயற்சிகளை எடுத்துள்ளாராம் தர்ஷன்.

புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு, தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் சினிமாவில் விரையில் நுழைய காத்திருக்கிறாராம்.

The next man comes from the Shivaji Ganesan family

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் தற்போது கமல்ஹாசனையே இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

கமல் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

இதில் விஜய்சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் ஜீன் 3ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் தொடரும் என கமல் தெரிவித்துள்ளார். எனவே ஓரிரு படங்களை முடித்துவிட்டு கமலை மீண்டும் இயக்குவார் லோகேஷ் என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட லோகேஷ் படம் குறித்து பேசியுள்ளார்.

அதில்…

விக்ரம் பட சூட்டிங்கில் கமலுக்கு ஒரு மாதம் லோகேஷ் தான் மேக்-அப் போட்டாராம்.

OLD IS GOLD பழைய ‘விக்ரம்’ பட கமல்ஹாசனை மீண்டும் கொண்டு வரும் லோகேஷ்

கமல்ஹாசனுக்கு மேக்-அப் போட எப்போதும் ஒரு குழு உள்ளது. ஆனால் விக்ரம் படத்தில்தான் முதன்முறையாக இயக்குனரை மேக்-அப் போட அனுமதித்துள்ளாராம் கமல்ஹாசன்.

இப்போ சொல்லுங்க.. லோகேஷ் அதிர்ஷ்டக்கார டைரக்டர் தானே..

All this is not on Kamal’s list; Good luck scoring for Lokesh

சிம்பு வீட்டு வாசலில் தர்ணா.; கல்யாணம் கட்டிக்க அடம்பிடிக்கும் ஸ்ரீநிதி

சிம்பு வீட்டு வாசலில் தர்ணா.; கல்யாணம் கட்டிக்க அடம்பிடிக்கும் ஸ்ரீநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னை பன்முகத் திறமையாளராக வளர்த்துக் கொண்டவர் நடிகர் சிலம்பரசன்.

இவரின் வயது 40 நெருங்கிவிட்ட போதிலும் அவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளை காதலித்து வந்தார்.

ஆனால் அந்த காதல் திருமணம் வரை செல்லவில்லை. அந்த நடிகைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருமணம் நடக்க வேண்டி சிம்பு செய்த பரிகாரம் என்ன தெரியுமா?

சிம்புக்கு அவரது பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் வரன் செட்டாகவில்லை.

இந்த நிலையில் சிம்புவை திருமணம் செய்ய அடம்பிடித்து வருகிறார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

இந்த நடிகை ஸ்ரீநிதி அண்மைக்காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அண்மையில் அஜித் நடித்த வலிமை படத்தை கிண்டலடித்தார்.

அஜித் ஸ்மார்ட்டாக இருந்தார். ஆனால் வலிமை படத்தை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமையில்லை என பேசியிருந்தார்.

அது அப்போதே சர்ச்சையானது.

இந்த நிலையில் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சிம்பு திருமணம் பற்றி கேட்டவுடன் கண்ணீர் சிந்திய டி.ஆர்

இதனையடுத்து சிலர் ஏன். நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாமே? என கமெண்ட் அடித்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் சிம்பு சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்!…

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என ஸ்ரீநிதி பதிவிட்டுள்ளார்.

Protest at Simbu’s doorstep .; Sreenithi who tries to marry simbu

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படம் ஜீன் 3ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருப்பதால் விக்ரம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து தளபதி 67 படத்தை இயக்குவது குறித்து அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.

தளபதி 67 படம் மாஸாக அதே சமயம் கிளாஸாக இருக்கும் என ஒரு விழாவில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj talks about Thalapathy 67

விஜய்ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி.; உலக மருத்துவ அரசியலை உலுக்கிய உண்மைச் சம்பவம்

விஜய்ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி.; உலக மருத்துவ அரசியலை உலுக்கிய உண்மைச் சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டில் 87 வயதான சாருஹாசனை ஹீரோவாக்கி படம் இயக்கியவர் விஜய்ஸ்ரீ ஜி. அப்போதே சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.

இதன்பின்னர் பிரபல பிஆர்ஓ நிகில் முருகனை கதையின் நாயகனாக்கி பவுடர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஜீன் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து 14 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகிய மோகனை மீண்டும் நாயகனாக்கி ஹரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆதவன், ஜெயக்குமார், ரயில் ரவி, மனோபாலா, ஸ்வாதி, பிருந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

மனோ பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மார்ட்டி இசையைமத்து வருகிறார். குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

கோவையை சேர்ந்த மோகன் என்பவருடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ. ஹரா படத்தை தீபாவளி சமயத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.

இந்த படம் இந்திய அரசியல் மற்றும் உலக மருத்துவ அரசியலை உலுக்கும் படமாக உருவாகி வருகிறது.

அவரின் ட்விட்டர் பதிவில்…

தசைநார் சிதைவு நோய்க்கான ஊசி 16 கோடி ருபாய்! மருந்தின் விலையுடன் இறக்குமதி வரி, 6 கோடி சேர்த்து, 22 கோடி ரூபாய் !!செலவாகும் என அறிந்தேன்? #பவுடர் #ஹராவுக்கு பிறகு 4 தமிழக குழந்தைகளின் வலி வேதனையை பணத்திற்காக போராடியதை படமாக்காவுள்ளேன்.

என பதிவிட்டுள்ளார்.

இந்த படம் வெளியாகும்போது இது இந்திய மருத்துவம் மற்றும் அரசியல் உலகில் பேசும் பெருளாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

கூடுதல் தகவல்….

கடந்த 2021 செப்டம்பரில்… முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தங்களின் 9 மாத குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டுமென சேலத்தைச் சேர்ந்த பூபதி-ஜெயந்தி தம்பதி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

Vijay Sri g’s next is based on true story

More Articles
Follows