CALL BOY CULTURE : பொய் சொல்லி ஏமாத்தல.. இந்த படத்துக்கு வந்துடாதீங்க ப்ளீஸ்.!

CALL BOY CULTURE : பொய் சொல்லி ஏமாத்தல.. இந்த படத்துக்கு வந்துடாதீங்க ப்ளீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்:’ரா .. .ரா .சரசுக்கு ராரா…’ படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் ‘ரா . .ரா .சரசுக்கு ராரா…’

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்றொரு படம்
உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர்.

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

படத்தின் கதை?

யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் சிரமங்களைச் சொல்கிறது கதை. பரபரப்பாகவும் காமெடியாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது பரவி வரும் கால்பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.

படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளையும் , சுதந்திரமான காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார் அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று அறுவது கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்.

படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் கேட்டபோது….

” இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தான் நான் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன.

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது.

இயக்குநர் கேட்டபடி நடிப்புக் கலைஞர்கள் ஆகட்டும் தொழில்நுட்ப வசதிகளாகட்டும் அனைத்தையும் நான் செய்து கொடுத்தேன்.அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது.

இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம் தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்க்கலாம்.

இப்போது வருகிற படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றுக் கொண்டு குடி, புகை,கொலை, குத்து வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமை நடக்கிறது.படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம்.

ஆனால் நாங்கள் “இது ஒரு ஏ படம்” தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம் .

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

இது அனைவருக்குமான படம் அல்ல.பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை.”என்கிறார் தயாரிப்பாளர்.

9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

▶️https://youtu.be/iriSte4UGMo?si=bCSfJhdaAqLCeLAH

Rara Sarasukku Rara movie adults only allowed

தன் பிறந்தநாளில் தனது 2வது திருமணத்தை முத்தமிட்டு உறுதி செய்த அமலா பால்

தன் பிறந்தநாளில் தனது 2வது திருமணத்தை முத்தமிட்டு உறுதி செய்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கிய ‘தலைவா’ மற்றும் ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.

அப்போதே விஜய் – அமலாபால் இருவரும் நெருக்கமாகி காதலித்து திருமணம் 2016ல் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமாகி சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.

அமலா பால்

அமலா பாலுடன் நடிகர் தனுஷ் நெருக்கம் காட்டியதால் இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.

பின்னர் சில வருடங்களில் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு தனது 2வது திருமணத்திற்கு அமலா பால் தயாராகி உள்ளார்.

அதன்படி அமலாபால் விரைவில் திருமணம் செய்துக் கொள்கிறார். இதை நடிகையின் காதலரான ஜெகத் தேசாய் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

அமலா பால்

அதில்.. அமலாவுக்கு ஜகத் ப்ரோபோஸ் செய்யும் வீடியோவை பகிர்ந்து அமலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜகதத்தின் ப்ரோபோஸ்லை ஏற்றுக் கொண்ட நடிகை அமலா, வீடியோவில் அவருக்கு முத்தம் கொடுத்தும் உள்ளார்.

ஜகத்தின் பதிவில் திருமண மணிகள் என்ற ஹேஷ் டேக்கு உள்ளது.

இன்று அக்டோபர் 26 ஆம் தேதி நடிகை அமலாபால் தன் பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அமலா பால்

Amala Paul confirmed her 2nd marriage on her Birthday

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோதாஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் பார்த்திபன் கேரக்டர் லுக்கையும் மற்றும் நடிகர் இயக்குனர் பார்த்திபனின் உண்மையான தோற்றத்தையும் இணைத்து டிசைன் செய்துள்ளனர்.

நடிகர் பார்த்திபன் லியோ பார்த்திபனாக என கேப்சன் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.

Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!

பார்த்திபன்

Parthiban post about Parthibàn character in Leo

லியோ-வில் தம்மாத்துண்டு கேரக்டர்.; என்னையே மன்னிக்க முடியல.. திரைச்சித்தன் லோகி.. – மன்சூர் அலிகான்

லியோ-வில் தம்மாத்துண்டு கேரக்டர்.; என்னையே மன்னிக்க முடியல.. திரைச்சித்தன் லோகி.. – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் மன்சூர் அலிகான்.

ஆனால் லியோ படத்தில் தனக்கு சின்ன கேரக்டர் தம்மா துண்டு கொடுத்து விட்டதாக லோகேஷ் கனகராஜை மறைமுகமாக குறை சொல்லி இருந்தார் மன்சூர் அலிகான்.

தற்போது இதற்கு புது விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அதன் விவரம் வருமாறு…

லோகி ஒரு திரைச் சித்தன்!
மன்சூர் அலிகான் புகழாரம்!!

யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோவில் தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது.

அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். லோகி ஒரு திரைச் சித்தன்.

3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்.

சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது
ஒரு லட்சத்து பதினாயிரம் அடி!

என் வாழ்நாளில் 350’க்கு மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை. நான் தம்பி விஜய்யுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு! இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது.

தவறாக வசூல் காட்டி வெளியே Heena வைப்போல் பலர் குறைக்கின்றனர். நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது.

பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன். என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக!

சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்…
நெஞ்சார்ந்த நன்றிகள்!
—-மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

Mansoor Alikhan explain for Leo movie character

நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்

நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவரது இயக்கத்தில் வெளியான பீட்சா, சூது கவ்வும், இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘பேட்ட’ என்ற படத்தை இயக்கி 1990-களின் ரஜினியை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

மேலும் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த இரண்டு படங்களும் தோல்வியுற்ற நிலையில் தற்போது லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் ஜிகர்தண்டா xx புரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொஆண்ட இயக்குநர் அப்போது நடிகர் விஜய் படத்தை இயக்குவது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இரண்டு கதைகளை சொன்னேன்.. அவருக்கு கதை பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்த கதையுடன் விஜய்யை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Vijay and Karthik Subbaraj movie updates

உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. நீங்க தலைவர்.. மக்களுக்கு தெரியும்..; ரஜினி பதிவுக்கு அமிதாப் பதில்

உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. நீங்க தலைவர்.. மக்களுக்கு தெரியும்..; ரஜினி பதிவுக்கு அமிதாப் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஞானவேல் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க ரஜினியுடன் பான் இந்தியா ஸ்டார்ஸ் நடித்து வருகின்றனர்.

அமிதாப், ராணா, பகத், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து…, “33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைகாவின் “தலைவர் 170” படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப்பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் நேற்று பார்த்தோம்.

ரஜினியின் இந்த பதிவுக்கு அமிதாப் பதில் அளித்துள்ளார். அவரின் பதிவில்…

“ரஜினிகாந்த் சார் நீங்கள் என் மீது மிகவும் கருணை காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள், அதில் தலைவர் 170 என உள்ளது. தலைவர் என்றால்.. லீடர், ஹெட், மற்றும் சீஃப், நீங்கள் தான் லீடர், நீங்கள் தான் ஹெட், நீங்கள் தான் சீஃப். இதில் ஏதாவது சந்தேகம் இருக்கா மக்களே? என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது. மீண்டும் உங்களுடன் பணியாற்றுவதில் பெருமிதம்” என தெரிவித்துள்ளார் அமிதாப்பச்சன்.

அமிதாப்பச்சன்

Amitabh bachchan reply to Rajini You are Thalaivar Leader

More Articles
Follows