தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனையொட்டி ஒரு பிரபல இணையத்தளத்தில் அஜித் பிறந்தநாள் சிறப்பு பேட்டியில் நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாண்டு கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது…
தனக்கு கீழே வேலை பார்த்தவர்களை உயர்த்தி பார்த்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார் போல அஜித்தும் தன் மேனேஜரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர்.
அவர் வான்மதி படத்தில் நடித்தபோது, அப்பட நாயகியை மணக்க விரும்பினார்.
அதன்படி அவரது அம்மாவிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் தன் மகள் இப்போது நடிக்க வேண்டும் என அவரது அம்மா மறுத்துவிட்டார்.
அதன்பின்னர் தொடரும் படத்தில் நடித்தபோது, நடிகை ஹீராவுக்கு காதல் கடிதம் எழுதினார். அதுவும் தோல்வியில் முடிந்தது.
ஆனால் அதன்பின்னர் உறுதியாக நின்று ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார்.
இந்திய நடிகர்களில் இந்து, கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய 3 முறைப்படி திருமணம் செய்துக் கொண்டவர் அஜித் ஒருவர்தான்” என்று பேசினார்.
வான்மதி, தொடரும், வில்லன் ஆகிய படங்களில் பயில்வான் ரங்கநாதன் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
தேசிய விருதுபெற்ற காதல்கோட்டை மற்றும் வில்லன் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith had 2 love failure then he married 3rd lover Shalini – Bayilvan Ranganathan open talk