அஜித்தின் 3வது காதலிதான் ஷாலினி; ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

அஜித்தின் 3வது காதலிதான் ஷாலினி; ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith interview bayilvan and paanduகடந்த மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையொட்டி ஒரு பிரபல இணையத்தளத்தில் அஜித் பிறந்தநாள் சிறப்பு பேட்டியில் நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாண்டு கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது…

தனக்கு கீழே வேலை பார்த்தவர்களை உயர்த்தி பார்த்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார் போல அஜித்தும் தன் மேனேஜரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர்.

அவர் வான்மதி படத்தில் நடித்தபோது, அப்பட நாயகியை மணக்க விரும்பினார்.

அதன்படி அவரது அம்மாவிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் தன் மகள் இப்போது நடிக்க வேண்டும் என அவரது அம்மா மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் தொடரும் படத்தில் நடித்தபோது, நடிகை ஹீராவுக்கு காதல் கடிதம் எழுதினார். அதுவும் தோல்வியில் முடிந்தது.

ஆனால் அதன்பின்னர் உறுதியாக நின்று ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார்.

இந்திய நடிகர்களில் இந்து, கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய 3 முறைப்படி திருமணம் செய்துக் கொண்டவர் அஜித் ஒருவர்தான்” என்று பேசினார்.

வான்மதி, தொடரும், வில்லன் ஆகிய படங்களில் பயில்வான் ரங்கநாதன் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

தேசிய விருதுபெற்ற காதல்கோட்டை மற்றும் வில்லன் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith had 2 love failure then he married 3rd lover Shalini – Bayilvan Ranganathan open talk

ajith 2nd lover heera and 1st love swathi

கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு உதாரணம் பற்றி கூறும்போது, மகாபாரதம் பற்றி பேசியிருந்தார் கமல்ஹாசன்.

பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும், மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தை விட்டே நாம் வரவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இது மகாபாரதத்தை இழிவு படுத்துவதாகக் கூறி மனுத்தாக்கல்

இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

எனவே, கமல் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்ததுடன் அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

தன் முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த சூர்யா

தன் முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaசினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையில் ரசிகர்களிடையே நற்பெயரை கொண்டவர் நடிகர் சூர்யா.

இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஒரு துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில்தான் பணிபுரிந்தார்.

இவரின் முதல் மாத சம்பளத்தில் தன்னுடைய தாய்க்கு ஒரு சேலையை வாங்கினாராம். அதன் மதிப்பு ரூ. 800.

அதை பெற்றுக் கொண்ட இவரது தாய், அன்றே அணிந்துக் கொண்டு கோயிலுக்கு சென்றாராம்.

பின்னர் அந்த வேலையைவிட்டு விட்டு சினிமாவில் சேரும்போது, மற்றவர்கள் சூர்யாவை தடுத்தார்களாம்.

ஆனால், இவரது அம்மாவே இவருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.

சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் விரதம் இருநது கடவுளிடம் வேண்டிக் கொள்வாராம் அம்மா.

அனுஷ்காவை தொடர்ந்து வாள்வீச்சு பயிற்சியில் ஸ்ருதி

அனுஷ்காவை தொடர்ந்து வாள்வீச்சு பயிற்சியில் ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movieஅண்மையில் வெளியான பாகுபலி 2 படத்தில் வாள் வீசி எதிரிகளை துவம்சம் செய்தார் இளவரசி தேவசேனாவாகிய அனுஷ்கா.

தற்போது இவரது வழியில் ஸ்ருதிஹாசனும், வாள் வீச்சில் லண்டனில் பயிற்சி பெற்று வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்திற்காகத்தான் இந்த வாள் பயிற்சியாம்.

இவரும் இப்படத்தில் இளவரசியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது,

“வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர்.

பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார்.

இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movie

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movie

ஆர்.கே.சுரேஷ் சூட்டிங்கில் விபத்து; கொதிக்கும் வெந்நீரில் விழுந்தார்

ஆர்.கே.சுரேஷ் சூட்டிங்கில் விபத்து; கொதிக்கும் வெந்நீரில் விழுந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh admitted in Hospital due to fire accident in Vettai Naai shooting spotவிநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘ ‘பில்லா பாண்டி” வேட்டை நாய்” போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

‘வேட்டை நாய் ‘ கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான் எஸ்.ஜெய்சங்கர்.

இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி ‘மன்னாரு’ இயக்கியவர்.

‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம்.

நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.

ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.

அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது.

அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RK Suresh admitted in Hospital due to fire accident in Vettai Naai shooting spot

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Rajinikanthஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தன் வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் தனுஷ்.

ரஜினி மற்றும் தனுஷ் இடையே மாமனார்-மருமகன் உறவு இருந்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறையாகும்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது… கடவுள் நினைத்தால் நிச்சயம் இணைந்து நடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows