விஜய்க்கு வழிவிட்டு விலகிய வில்லன் விஷால்

விஜய்க்கு வழிவிட்டு விலகிய வில்லன் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தெலங்கானாவில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அதே நாளில் விஷாலின் இரண்டு படங்கள் இந்த படத்துடன் மோதவுள்ளதை நாம் முன்பே நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு பதிப்பு டிடெக்டிவ் என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும் மோகன்லால், ஹன்சிவா உடன் விஷால் இணைந்துள்ள வில்லன் என்ற மலையாள படம் கேரளாவில் வெளியாகிறது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் வில்லன் படத்தின் வெளியீட்டை கேரளாவில் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

அதாவது அக்டோபர் 27ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

உன்னிக்கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

தலைவர்-தளபதிக்கு அடுத்த இடத்தை பிடித்த தல

தலைவர்-தளபதிக்கு அடுத்த இடத்தை பிடித்த தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay ajithதமிழகத்தின் அரசியலே சென்னை கோடம்பாக்கத்தை சுற்றி வரும்போது, சினிமா வியாபாரத்திற்கு மட்டும் சென்னை விதிவிலக்கா என்ன?

இந்நிலையில் இதுவரை வெளியான படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை செய்த படங்கள் இவைதான் என தகவல்கள் வந்துள்ளன.

அதில் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

பாகுபலி 2- ரூ 18.85 கோடி
கபாலி- ரூ 12.35 கோடி
தெறி- ரூ 11.5 கோடி
எந்திரன் – ரூ 11.2 கோடி
விவேகம்- ரூ 10.05 கோடி

2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள், காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி மாலா ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, கேளிக்கை வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் நட்சத்திரக் கிரிக்கெட்டோ அல்லது கலைநிகழ்ச்சியோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஷால் கூறினார்.

மேலும் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகுதான் தன் திருமணம் என உறுதியாக தெரிவித்தார் விஷால்.

மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்

மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

inox multiplesதிரையரங்க கட்டணம் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது.

உணவகங்களுடன் கூடிய மால்களில் செயல்பட்டுவரும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 207 ரூபாய் கட்டணமாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் இல்லாமல் 3 திரையரங்குகளுக்கு மேல் இருக்கின்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 164 ரூபாய் வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இருவகை மல்ட்டி பிளக்ஸ்களிலும் 15 வகையான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது அதன்படி…

1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்கவேண்டும்

2. 800 இருக்கைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்

3. அமரும் பார்வையாளர் இருக்கை 20 அங்குலம் இருக்க வேண்டும்

4. இரு வரிசைகளுக்கான இடைவேளி 41.5 அங்குலம் இருக்க வேண்டும்

5. 100 சதவீதம் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்

6. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்படவேண்டும்

7. டி.டி.எஸ். ஒலி அமைப்பு இருக்க வேண்டும்

8. மெயின் ஸ்பீக்கர்கள் 3 இருக்க வேண்டும்

9. three way speeckers இருக்க வேண்டும்

10. sround sound systam இருக்க வேண்டும்

11. நவீன கழிவறை வசதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

12. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாபி இருக்க வேண்டும்

13. நுழைவு சீட்டு கணினிமுறையில் வழங்கப்பட வேண்டும்

14. இணையத்தில் நுழைவு சீட்டு வழங்க வேண்டும்

15. நுழைவு சீட்டை வீடுகளுக்கு சென்று தரும் வசதி இருக்க வேண்டும்

5 வகையான வசதிகள் மட்டும் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வரிகளுடன் சேர்த்து 147 ரூபாய் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்க வேண்டும்

2. 800 இருக்கைகளுக்கு குறைவாக இருக்கலாம்

3. ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்

4. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்பட வேண்டும்

5. டி.டி.எஸ் ஒலி அமைப்பு இருக்க வேண்டும்

மேற்கண்ட வசதிகள் இல்லாத திரையரங்குகள் மல்ட்டி பிளக்ஸ் என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது சட்டவிரோதம் என தெரிய வந்துள்ளது.

ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 stillsரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்‌ஷன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இதன் 3டி மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவினை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவுக்கு மட்டும் ரூ.12 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம் லைக்கா.

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், டிரையிலர் வெளியீட்டை டிசம்பர் மாதம் சென்னையிலும் நடத்தவுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 26ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

பாஜக பிரமுகர் மூக்கை உடைத்த சந்தானம் மீது மூன்று வழக்கு

பாஜக பிரமுகர் மூக்கை உடைத்த சந்தானம் மீது மூன்று வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamதமிழ் சினிமாவின் பிரபலமான காமெடியன் சந்தானம்.

இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,40. இவர் அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார் சந்தானம்.

இதன்படி சண்முகசுந்தரத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் சண்முகசுந்தரம் கட்டிட பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக சந்தானம் அவரிடம் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் காமெடி செய்து வந்தாலும் நிஜத்தில் கராத்தே கற்றவர் சந்தானம்.

எனவே சண்முகசுந்தரத்தை மற்றும் அவரது வக்கீல் பிரேம் ஆனந்ததை கராத்தே பாணியில் தாக்கியுள்ளார்.

எனவே சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார்.

அதுபோல் சந்தானமும் காவல் நிலையத்தில் புகார் செய்து, தனக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சண்முகசுந்தரம் பாஜ கட்சியை சேர்ந்தவர் என்பதால், சந்தானம் சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையை பாஜக பிரமுகர்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

More Articles
Follows