‘காதல் கோட்டை 25 ஆண்டுகள்’ : சூர்யாவை மறந்த அஜித்.; ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடலாமா தல.?

‘காதல் கோட்டை 25 ஆண்டுகள்’ : சூர்யாவை மறந்த அஜித்.; ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடலாமா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி, ஹீரா, தலைவாசல் விஜய், கரண், பாண்டு உள்ளிட்டோர் நடித்த படம் ‘காதல் கோட்டை’.

தமிழ் சினிமாவில் பார்க்காமலே காதல் வரும் என்ற காவியத்தை சொன்ன படம் இது.

சூர்யா என்ற கேரக்டரிலும் அஜித்தும் கமலி என்ற கேரக்டரிலும் தேவயாணியும் வாழ்ந்து இருந்தனர்.

தேவா இசையில் உருவான இந்த படத்தில் அனைத்துப் பாடல்களும் பட்டி முதல் சிட்டி வரை ஒலித்தது.

தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

1996 ஜூலை 12 அன்று வெளியான இந்த காதல் கோட்டை படம் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

(சிறந்த இயக்கத்துக்காகவும் சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றார் அகத்தியன்.)

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் விழா எடுத்தனர்.

இயக்குநர் அகத்தியன், நடிகை தேவயானி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த சில வருடங்களாக அஜித் தன் பட விழாக்களில் கூட கலந்துக் கொள்வதில்லை. எனவே தற்போதைய வழக்கம்படி அஜித் இதில் பங்கேற்கவில்லை. ஒருவேளை பழைய அஜித்தாக இருந்தால் வந்து இருப்பது என்னவோ..?

இந்த நிலையில் இந்த விழா தொடர்பான புகைப்படங்களை தங்கர் பச்சான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்…

“காதல் கோட்டை” திரைப்படம் எனக்கு எட்டாவதுப்படம். இதன் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்வு நேற்று அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் இனிதே நடந்தேறியது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
#காதல்கோட்டை
#kathalkottai
#ThangarBachan https://t.co/lZfuBBF0Hp

It has been 25 years since the release of movie Kadhal Kottai

தலைவலி கண் எரிச்சல் தூக்கமின்மையை போக்க அரசுக்கு கமல்ஹாசன் யோசனை

தலைவலி கண் எரிச்சல் தூக்கமின்மையை போக்க அரசுக்கு கமல்ஹாசன் யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன.

இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ‘ஸ்க்ரீன் டைம்’ கணிசமான அளவு குறைக்க முடியும்.

கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றிற்காகச் சிரமப்படும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும்.

கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு அருகேயுள்ள கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா தன் மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையினால் ஒரு இணைய ரேடியோவை (www.kalviradio.com) உருவாக்கியுள்ளார்.

2ஜி இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதைச் செம்மையாக நடத்தி வருகிறார்கள்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர்களால் பயன்பெற்று வருகின்றனர். பெரிய முதலீடு, தொழில்நுட்பம் தேவையின்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலேயே இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு மாணவருக்கு வகுப்பிற்கென நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 300MB டேட்டாதான் இதற்குத் தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும் அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தக் கல்வி ரேடியோ தளத்தினை இதுவரை 3,20,000 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதும், 14,500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதுமே இதன் தேவைக்கான அத்தாட்சி. தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்க்ரீன் நேரத்தைக் குறைத்துக்கொள்ள உதவும்.

தமிழக அரசு இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

கமல்ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan requests TN government

கார்த்தி படத்தை தொடர்ந்து சசிகுமார் படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

கார்த்தி படத்தை தொடர்ந்து சசிகுமார் படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் புரொடக்சன் #5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இன்று பூஜையுடன் பாடல்பதிவு ஆரம்பமானது.

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா
எடிட்டிங் சிவ நந்தீஸ்வரன்
கலை இயக்கம் மிலன்
சண்டைப் பயிற்சி அன்பறிவு,
நிர்வாகத் தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு மேற்பார்வை A. பால் பாண்டியன்
மக்கள் தொடர்பு A. ஜான்

கிராமப் பின்னணியில் பிரம்மாண்ட, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Prince pictures next film with Sasi Kumar

BREAKING ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது.; நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து காட்டம்

BREAKING ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது.; நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து காட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayகடந்த 2012ல் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை வாங்கினார்.

இதற்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டும்.

ஆனால் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் கண்டனம்..

மேலும் நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் உயர் நீதிமன்றம் விஜய் மீது காட்டமாக தெரிவித்துள்ளது.

Thalapathy Vijay fined 1 lac by Madras High Court

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் பாராட்டை பெற்ற அதர்வா படம்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் பாராட்டை பெற்ற அதர்வா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shiva rajkumarஇயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூறியதாவது…

இயக்குநர் இராஜமோகன் எனது நீண்ட கால நண்பர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் “அட்ரஸ்” படம் குறித்து கேளிப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது. படத்தின் டீஸரை எனக்கு காட்டினார். டீஸர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது.

இந்தப்படம் ஒரு மாற்றத்தை தரும் மக்களின் படைப்பாக இருக்கும். காட்சிகள் எல்லாம் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. அதர்வா நன்றாக நடித்திருந்தார்.

இந்தக்குழு கடுமையாக உழைத்திருப்பது டீஸரிலேயே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.

இது குறித்து இயக்குநர் இராஜமோகன் பகிந்துகொண்டதாவது..

நான் விஜய் மில்டன் அவர்களிடம் பல காலமாக உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர் தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும் பொது அவர் படங்களில் வேலை பார்ப்பேன்.

விஜய் மில்டன் சார் இப்போது கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்களை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார்.

அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ்குமார் அவர்களை முன்பிருந்தே தெரியும். அவர் என்னை குறித்து விசாரித்த போது, என் படத்தின் டீஸரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படத்தை குறித்து அனைத்து விசயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

என்னை வெகுவாக பாராடியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்த படம் குறித்து பாரட்டி பேசினார். ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியதுபெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீஸை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து இதை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மிக உச்சத்தில் இருக்கும் நடிகர், எங்கள் படத்தை இந்தளவு பாராட்டியது ,மிகப்பெரும் மகிழ்ச்சியையும், உற்சாக்த்தையும் தந்துள்ளது.

அட்ரஸ் படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும் என்றார்.

மொழி வாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கி கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதை தான் இந்த “அட்ரஸ்” திரைப்படம் இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.

Kannada Super Star Shiva Rajkumar praises Address team for their teaser

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி உடல்நிலை & கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு அனுமதியுடன் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் செட் போடப்பட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

தன் காட்சிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி.

அங்கு மருத்துவ பரிசோதனை முடித்து 2 வாரங்கள் ஓய்வில் இருந்தார்.

இதன் பின்னர் சென்னை வந்த ஓரிரு தினங்களில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

“தனது அரசியல் பிரவேசத்திற்காக மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.

இதே நிர்வாகிகள் ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்களில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவார்கள்.

இனி எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை.” என அறிக்கை வெளியிட்டார்

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறாராம் ரஜினி.

அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நிறைவு செய்கிறார் ரஜினி.

‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா..*. இந்த பாடல் ஏனோ தற்போது நினைவுக்கு வருகிறதே…

Rajini is leaving for West Bengal on July 14 for the final shoot of Annaatthe

More Articles
Follows