கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agni Siragugal‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.

‘அக்னி சிறகுகள்’ படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.
அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது.

இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்..

“அல்மதி நகரின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். இயற்கை எழிலும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்தியதை, பரவசம் தந்த ஒரு புனிதமான அனுபவம் என்றே கூற வேண்டும்.
பனி போர்த்திய மலை முகடுகள், தங்கமென மின்னும் பாலைவன மணல் துகள்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ கனவுலகில் மிதப்பது போலத்தான் இருந்தது.
இங்கு படப்பிடிப்பை நடத்தியது குறித்து ஒட்டு மொத்தக் குழுவும் மகிழ்ச்சியடைந்ததோடு, அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்திய முதல் இந்தியப் படம் அக்னி சிறகுகள் என்பது குறித்தும் மிகவும் பெருமை கொள்கிறோம்.
அது மட்டுமல்ல…. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் சில சண்டைக் காட்சிகளையும் இங்கு படமாக்கியிருக்கிறோம். ஆயுதங்களின்றி வெறும் கைகளால் சண்டையிடும் மார்ஷல் ஆர்ட் தற்காப்பு வகையில் ஒரு வகையான நொம்ட்ஸ் என்ற கலையில் இங்குள்ள குழுக்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன. சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி குதிரையேற்றம் போன்ற சாகசங்களிலும் வல்லவர்கள் இவர்கள். ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இடம் பெறும் இந்தப் புதுமையான சண்டைக் காட்சிகள், நமது ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும். இறுதியாகச் சொல்ல வேண்டுமானால் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் வெளியான பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கஜகஸ்தான் மிகப் பெரிய சுற்றுலா கேந்திரமாக மாறும்” என்றார் இயக்குநர் நவீன்.
ரசிகர்களை இருக்கையின் நுனியிலேய துவக்கம் முதல் இறுதிவரை அமரவைக்கூடிய விறுவிறுப்பான திரில்லர் பாணி படமான அகினி சிறகுகள, மூன்று இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. அருண் விஜய், விஜய் ஆன்டனி, அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, சென்ராயன், ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அக்னி சிறகுகள்’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

சினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

சினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay got 2nd place after Rajini Bigil movie budget newsஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது. எனவே மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகும்.

அண்மைக்காலமாக தமிழ் & தெலுங்கு சினிமாவுக்கும் உலகளவில் மார்கெட் இருப்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம்தான் இதுவரையில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பட்ஜெட் படமாக இருக்கிறது.

லைகா தயாரித்த இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 450 கோடி என்றனர்.

இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தமிழ் சினிமாவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 180 கோடியில் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் உரிமை மட்டும் 45 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் படத்தின் வியாபாரமும் களைகட்டி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் பிசினஸ் முழு விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Vijay got 2nd place after Rajini Bigil movie budget news

அட்லி கதை திருட்டு; பிகிலுக்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு

அட்லி கதை திருட்டு; பிகிலுக்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil story theft case against Director Atleeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையொட்டி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பிகில் படத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ க்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.

Vijays Bigil story theft case against Director Atlee

ஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் !

ஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shivam mahadevanபல புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பவர் D இமான். திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக்கொள்பவர். சமீபத்தில் குக்கிராமத்தில் பாடல்கள் பாடி பிரபலமடைந்த கண்தெரியாத கலைஞர் குருமூர்த்தியை தேடிக்கண்டுபிடித்து அவரது கனவை தன் படத்தில் பாடல் பாடச் செய்ததன் மூலம் நனவாக்கியுள்ளார். இதனையடுத்து தற்போது இந்திய அளவில் மிகப்பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஷங்கர் மாகாதேவனின் புதல்வர் சிவம் மகாதேவனை தமிழில் பாடகராக அறிமுகப்படுத்துகிறார். ஜீவா நடிக்கும் “சீறு” படத்தில் விவேகா வரிகளில் பாடகராக அறிமுகம் ஆகிறார் சிவம் மகாதேவன்.

இசையமைப்பாளர் D இமான் இது பற்றி கூறியதாவது…

இசைக்கு பெயர் போன குடும்பத்தில் ஒருவரை அறிமுகப்படுத்துவதும் அவருடன் வேலை பார்ப்பதும் பெருமைமிகு தருணமாகும். தந்தையின் அடியொற்றி சிலர் வாய்ப்பு பெறுவார்கள் ஆனால் சிவம் இயல்பிலேயே நல்ல குரல்வளம் படைத்தவர் தனித்திறமை என்பது அவரது ஆத்மாவில் கலந்திருக்கிறது. தமிழக இசைத்துறை அவரது குரலை கொண்டாடும். எனது ஆசை ஒரு நாள் ஷங்கர் மகாதேவன் மற்றும் அவரது மகன்கள் சித்தார்த், சைவம் மூவரையும் என் இசையில் பாடவைக்க வேண்டுமென்பதாகும். அதுவும் கூடியவிரைவில் நனவாகும்.

“சீறு” குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் இப்படத்தை தயாரிக்கிறார். ரத்தன் சிவா இயக்கியுள்ளார். ரியா சுமன் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா S குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். K சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜு சுந்தரம் நடன அமைப்பு செய்ய பாடலகள் விவேகா எழுதியுள்ளார். படத்தின் இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakumarசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

அக்டோபர் -14-ந்தேதி காலை 9மணிக்கு
எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா லட்சுமணன்,மக்கள் குரல் ராம்ஜி , கொடைக்கானல் காந்தி எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை ,வரலாற்று துறை தலைவர் கவுசல்யா குமாரி ,எழுத்தாளர் .ம .ஸ்வீட்லின், எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய சிவக்குமார் சிவாஜியின் பட வசனங்களையும், ராமாயண, மாகபாரத மேற்கோள் பாடல்களையும் தன்குரலில் பேச அரங்கம் அதிர்ந்தது.

அவர் ஆற்றிய உரையிலிருந்து…

இந்த நிகழ்வு இங்கு நடப்பதற்கான முழுமுதல் காரணம் இன்பா. நான் சிவாஜியுடன் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், சிவாஜி பற்றி அனைத்து விஷயங்களும் புள்ளி விவரங்களுடன் தன் புத்தகத்தில் அவர் சொல்லியிருந்தார். சிவாஜி பற்றி முழுமையான ஒரு உரை நிகழ்த்த நினைத்த போது இன்பாவின் புத்தகம் தான் உறுதுணையாக இருந்தது. கடந்தாண்டு நடந்த உரையில் பதினைந்தாயிரம் பேர் முன்னிலையில் சிவாஜியின் 35 ஆண்டு கால சினிமாக்களை ஒரே மூச்சில் ஒரே டேக்கில் 75 நிமிடங்கள் பேசினேன்.

நான் பிறந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், தண்ணி மாதிரி பாவச்செயல். தீபாவளி பொங்கல் மாதிரி பண்டிகைகளில் அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த மாதிரி ஒரு பண்டிகை நாளில் 1956ல் “வணங்காமுடி” படம் பார்த்தேன். வசனம் எழுதியவர் ஏ கே வேலன் நடித்தவர் நம்ம வாத்தியார் சிவாஜி. உயிர் ,உடல் என எங்கும் நீக்கமற நடிப்பு ஊறிப்போனவர். சிற்பி இளவரசியை காதலிக்ககூடாது என சொல்ல இவர் காதலிப்பார் இவரை நாடு கடத்த, மன்னன் உத்தரவிட அதனை எதிர்த்து வசனம் பேசுவார். அரஙகமே அதிரும். அப்போதே சாவதற்குள் அந்த மனிதனை பார்த்துவிட்டு சாக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2 வருடங்களில் 1958 ல் சிவாஜிக்கு நெருக்கமானவர் குடும்பத்தில் கோயம்புத்தூரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். காலம் ஓடியது, ஓவிய கல்லூரி சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965 ல் நடிப்புதுறைக்குள் வந்தேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன். அதே நேரத்தில் கந்தன் கருணை படத்தில் முருகனுக்கு 36 பேரைப்பார்த்து கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன். அதில் தூதுவனாக வீரபாகுவாக என் வாத்தியார் சிவாஜி நடித்தார். அவரும் அசோகனும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது போய்ப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய வசனத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேத்த முடியாது என முடிவு செய்து சொந்தமாக நாடக ட்ரூப் ஆரம்பித்தேன் அது முடியமால் மேஜர் சுந்தர் ராஜன் ட்ரூப்பில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்கள் நடித்தேன். அப்போது தான் மனப்பாடம் செய்யும் கலையை கற்றேன். 67 வயதில் கம்பராமயணம் 15 ஆயிரம் படல்கள் கற்று அதனை சுருக்கி உரை நிகழ்த்தினேன். மகாபாரதம் 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து கற்று 6500 மாணவர்கள் முன்னே உரை நிகழ்த்தினேன். இதற்கெல்லாம் ஆசனாக இருந்தவர் சிவாஜி. என்னால் இது முடிகிறதென்றால் உங்களால் இதையும் தாண்ட முடியும். என்னை மாதிரி நூறு மடங்கு சாதனைகளை நீங்கள் புரிய முடியும்.

எவராவது, நான் மனனம் செய்த சாதனையை முறியடித்து, கற்று தேர்ந்து சாதனை புரிந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

இப்போது உரையின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

வாத்தியார் சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. கலை உலகம் திரண்டு விழா எடுத்தது. அம்மையார் ஜெயலலிதா தலைமை தாங்கினார் அப்போது வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.

பள்ளிப் படிப்பு இல்லை,
பரம்பரை பெருமை இல்லை,
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்,
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று திரைஉலகில் அழியாது இடம்பிடித்து விட்டான்,
ஒருசாண் முகத்தில் ஒராயிரம் பாவனை காட்டி, சிம்மக்குரலில் தீந்தமிழ் பேசி, அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்,
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்கூடடுவனாக, அரிச்சந்திரனாக , அசோகனாக, அப்பராய், ஐந்தாம் ஜார்ஜாக, வ ஊ சி யாக, வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்கு பாடங்கள். நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான். மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரி காட்டிவிட்டான்.

கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என மானிட வரலாறு சொல்ல,

சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என தமிழக திரைவரலாறு சொல்லும்.

வாழ்க சிவாஜி நாமம்!
ஓங்குக சிவாஜி புகழ்! நன்றி.

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Chandiniஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு.

சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல் , இவரை அணுகி ஒரு கதை சொல்ல , அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட.. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் .

அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து

தனது புதியபடத்தில் நடிக்க அழைத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம்.

மேற்கூரிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.

More Articles
Follows