முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer J Sathish kumar acting movies news updates‘தரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார்.

தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

இயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள நல்ல வேடங்களை ஏற்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே.

Producer J Sathish kumar acting movies news updates

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arish kumar talks about Women struggles in societyவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது,

“பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன.

பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறோம் என்கிற பெயரில், கூடவே சேர்த்து டார்ச்சரையும் அல்லவா கொடுத்து வருகிறோம்..?

அதேபோல பெண்கள் முன்னேற்றம் பற்றி இதுவரை வந்த திரைப்படங்களில் அவர்கள் இப்படி கஷ்டப்பட்டார்கள், இப்படி போராடினார்கள்….வெற்றி பெற்றார்கள் என்றுதான் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதன்முதலாக நடைமுறையில் ஒரு பெண் தான் பணிபுரியும் துறையில் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதை இது மிக மிக அவசரம் திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார் அந்த பணியை மேற்கொள்கின்றனர்.

அவ்வளவு ஏன், காக்கி உடையில் இருக்கும் பெண்ணையும் கூட சிலர் ஆபாசமாக பார்க்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள் என இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எனக்கு ரொம்பவே பிடித்தது.

நாம் நடிக்கிற படம் ஓடுகிறதோ இல்லையோ ஓடுகிற படத்தில் நாம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய பாலிசி.. அந்த வகையில் இந்த மிக மிக அவசரம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

Arish kumar talks about Women struggles in society

ரத்தக்கண்ணீர் MR ராதா போல ஆட்டம் போடுறாங்க…. – ‘CM’ பற்றி SAC

ரத்தக்கண்ணீர் MR ராதா போல ஆட்டம் போடுறாங்க…. – ‘CM’ பற்றி SAC

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC reveals title meaning of Cap Maari and story lineபுரட்சி இயக்குனர் பெயர் எடுத்த எஸ்ஏ. சந்திரசேகர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு கேப்மாரி என பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தலைப்பை சுருக்கமாக CM என்றும் சிலர் அழைக்கிறார்கள்.

இதில் ஜெய், வைபவி, அதுல்யா, சித்தார்த் விபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த பட டிரைலர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக உள்ளது. முத்தக் காட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் பற்றி எஸ்ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாவது…

தியேட்டரில் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.

எனவே அவர்களுக்காக கேப்மாரி என்ற இந்த படத்தை எடுத்தேன்.

இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள்.

அவர்கள் எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அட்வைஸ் சொல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன்.

ஒரு இளைஞன் 4 பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறான். அவன் கேரக்டருக்கு இந்த கேப்மாரி டைட்டில் பொருத்தமாக உள்ளது.” என்று விளக்கம் அளித்துள்ளார் எஸ்ஏசி.

SAC reveals title meaning of Cap Maari and story line

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treatசாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ஊடகவியலாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

திரைப்பட குழுவினர் இத்தகைய பாராட்டுகளுக்கிடையே, மூன்று நடிகர்களும் இடம்பெற்ற ஒரு புதிய டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். டிரைலர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காவியக் கதையை விவரிப்பதாக அமைந்திருந்தது. அருமையான பின்னணி இசை, அழகிய பின்னணிகாட்சிகள், ஆடம்பரமான கலை பங்களிப்புகள் என அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்து, ரசிப்போர் கண்களுக்கு விருந்தாகிறது.

இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போர் வீரனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், நடித்திருக்க, கிரிதியின் அழகும் அழகிய கதாபாத்திரமும் படத்திற்கு மெருகூட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி, டிரைலரில் இடம்பெற்றுள்ள அதிவீர போர் காட்சிகளை கண்டு மகிழுங்கள்.

http://bit.ly/Panipat_OfficialTrailer

இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் பேசுகையில், ‘ஊடகவியலாளர்களின் பின்னூட்டத்தை கேட்டு, பானிபட் திரைப்படக்குழு மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறது. டிரைலர் வெளியீட்டுக்கு முன்னரே, அவர்களுக்காக ஒரு சிறப்பு டிரைலர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அது மிகவும் நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசிகர்ளுக்கும் இந்த டிரைலர் பிடிக்கும் என திடமாக நம்புகிறோம். அவர்களது எதிர்பார்ப்புகளை முடிந்த வரையில் நிறைவேற்றியிருப்பதாகவும் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சுனிதா கோவரிகர், “பானிபட் டிரைலருக்கு கிடைத்த வரவேற்ப் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த டிரைலரும், திரைப்படமும் பிடிக்கும் என நம்புகிறோம்.

இத்திரைப்பட குழுவினர் ஒவ்வொருவரும் கடின உழைப்பை தந்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றி அவர்களை பெருமகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.’

ஷிபசிஷ் சர்கார், குழு தலைமை செயல் அதிகாரி – ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் பேசும் போது, ‘இயக்குனர் அஷுதோஷ் மற்றும் அவரது பெரும் இலக்கியப் படைப்பான ‘பானிபட்’ திரைப்படத்துடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இத்திரைப்படம் இவ்வுலக வரலாற்றின் மாபெரும் போரை நம் கண்முன் நிறுத்தும். டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஏகோபித்த வரவேற்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.’

ரோஹித் ஷெலட்கர், நிறுவனர், விஷன் வர்ல்ட் பிலிம்ஸ், ‘வரலாறும் திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த உணர்வுப்பூர்வமாக விஷயங்கள். அந்த இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் எனக்கு கிடைத்த மகத்தானதொரு வாய்ப்பு.

மராட்டிய சமுதாயத்தை சார்ந்தவனாகிய நான், மராட்டிய புராணக்கதைகளை, அதன் நாயகர்களை அதிகம் விரும்புகிறவன். ‘ஜோதா அக்பர்’, ‘ஸ்வதேஷ்’, ‘லகான்’ உள்ளிட்ட பெரும் காவிய படங்களைத் தந்த மதிப்பிற்குரிய இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவதென்பது எனது மாபெரும் கனவு நனவானயே காட்டுகிறது’ என்றார்.

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட ‘பானிபட்’ திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது.

ஒரு படையெடுப்பாளரின் கவனத்தை ஈர்க்காத வரையில், இந்துஸ்தான் மீதான அவர்களின் பிடிப்பும், அவர்களை சவாலுக்கு அழைப்பதற்கு யாருமற்ற நிலையும் நீடித்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஓரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார்.

‘ஏஜிபிபிஎல்’ சார்பாக சுனிதா கோவரிகர், ‘விஷன் வேர்ல்டு பிலிம்ஸ்’ சார்பாக ரோஹித் ஷெலட்கருடன் இணைந்து இப்பத்தை தயாரிக்க, அசுதோஷ் கோவரிகர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட தயாராக இருக்கிறது.

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treat

 

குட்டி த்ரிஷா முதல் ரம்யா வரை.; தளபதி 64 படத்தில் மல்டி ஸ்டார்ஸ்

குட்டி த்ரிஷா முதல் ரம்யா வரை.; தளபதி 64 படத்தில் மல்டி ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anchor Ramya is now part of Thalapathy 64 movie‘தளபதி 64’ என்ற தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கேரக்டரில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ஒரு நட்சத்திர பட்டாளமும் தினம் தினம் இணைந்து வருகிறது.

ஆண்ட்ரியா, பிரிகிடா, 96 பட குட்டி த்ரிஷா கௌரி, சேத்தன், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளின் ரம்யாவும் இணைந்திருக்கிறாராம்.

இவர் விஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anchor Ramya is now part of Thalapathy 64 movie

என் மரணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. : விஷால்

என் மரணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I felt my death in front of my eyes says Vishalசுந்தர் சி இயக்கத்தில் விஷால் தமன்னா இணைந்துள்ள படம் ஆக்ஷன். இந்த படம் அடுத்த வாரம் நவம்பர் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு…

வசனகர்த்தா பத்ரி பேசும்போது,

டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

நடிகர் சாரா பேசும்போது…

சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அவர் படங்களில் பொதுவாக கூட்டமாகவே இருக்கும். ஒரே நேரத்தில் 2, 3 காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்.

ஆனால், எதையும் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார் இயக்குநர் சுந்தர்.சி. என்றார்.

அகன்ஷாபூரி பேசும்போது…

டிவி தொடரில் என்னை பார்வதியாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இப்படம் மூலம் என்னை எல்லோரும் வெள்ளித் திரையில் காண்பார்கள். டிரைலர் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படம் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன் என்றார்.

ஹிப்ஹாப் ஆதி பேசும்போது..

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இப்படத்தைப் பொறுத்தவரையில் பாடல்களை விட பின்னணி இசைதான் முக்கிய இடம்பெறும். ஆக்ஷன் படத்தின் புரோமோ பாடலில் இரண்டு கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

எனக்கு எல்லோரும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து ஆதரவு கொடுத்து வருவதற்கு நன்றி என்றார்.

நடிகை தமன்னா பேசும்போது…

ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன்.

பாகுபலி படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். அந்த கனவை ஆக்ஷன் படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது.

ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள். என்று தான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன்.

விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது…

இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று. இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன்.

எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.

இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா? என்று சந்தேகம்தான்.

அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.

தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் ஆதிக்கு கொடுக்க கூடாது என்றிருந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.

மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது.

‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன்.

அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார்.

விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது…

சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.

‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான்.

ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது.

அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும்.

ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம்.

உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது.

ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.

யூடியூப்-ல் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர். 15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை.

இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள்.

‘துப்பறிவாளன்-2‘ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி பெரியளவில் பேசப்படுவார் என்றார்.

ஒரே ஒரு வேண்டுகோள். ஒவ்வொருத்தரும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

I felt my death in front of my eyes says Vishal

More Articles
Follows