கணவரை விவகாரத்து செய்யும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பட நடிகை??

கணவரை விவகாரத்து செய்யும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பட நடிகை??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி.

இதை தொடர்ந்து ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகை சுவாதி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே 2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சுவாதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை சுவாதி திடீரென்று நீக்கி உள்ளார்.

கணவருடன் சுவாதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் இதனாலேயே திருமண புகைப்படங்களை நீக்கி உள்ளார் என்றும் வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இச்செய்தி திரைத்துறையில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும், இரண்டு வருடத்துக்கு முன்பும் இதுபோன்ற வதந்தி பரவியது. அதனை சுவாதி மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress swathi divorcing to her husband

‘லாக்கர்’ மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்கள்

‘லாக்கர்’ மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன் – பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள். அதன் பிறகு பாரதி -வாசு, ராபர்ட்- ராஜசேகர், மலையாள சித்திக்- லால் போன்ற இரட்டையர்கள் பிரபலமானவர்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். அவர்கள் தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.

சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து ‘லாக்கர்’ என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள்.

இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.

இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

‘எதற்கும் துணிந்தவன்’ & ‘கேம் ஓவர்’ போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர்.

கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார். நாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.

வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர். பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.

களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர். நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர். இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவு பணி செய்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர்.

ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்தவர்.

படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.

முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணியில் இருக்கும் ‘லாக்கர்’ ஒரு ராபரி டிராமாவாக உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வர உள்ளது.

லாக்கர்

Double directors direct Locker tamil movie

‘கங்குவா’ படத்தில் சூர்யாவை மிரட்டும் வில்லனாக பிரபல ஒளிப்பதிவாளர்

‘கங்குவா’ படத்தில் சூர்யாவை மிரட்டும் வில்லனாக பிரபல ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

“கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

“கங்குவா” படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நட்டி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மேலும், சூர்யா, நட்டி  இவருக்கு நீண்ட சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நட்டி நட்ராஜ்

Natty natraj joins with suriya in kanguva movie

விக்ரம் படத்தில் இருந்து ஐஸ்வர்யா நீக்கம்.; கதையை மாற்றும் கௌதம் மேனன்.?

விக்ரம் படத்தில் இருந்து ஐஸ்வர்யா நீக்கம்.; கதையை மாற்றும் கௌதம் மேனன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

மேலும், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகியது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இவர் இல்லாமல் கதையில் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Aishwarya Rajesh’s scenes in ‘Dhruva Natchathiram’ to be chopped

துப்பாக்கி குண்டுகள் முழங்க சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்

துப்பாக்கி குண்டுகள் முழங்க சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்டம்பர் 15) வெளியாக உள்ளது.

இந்நிலையில், நேற்று (20-07-2023) எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு எஸ்.ஜே.சூர்யா ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அப்போது விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் டம்மி துப்பாக்கியின் குண்டுகள் முழங்க அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SJ Suryah celebrates his birthday in mark antony shooting spot

சிறந்த நடிகராக வேண்டும்.. விஜய் சேதுபதியுடன் இணைய வேண்டும்.. – சிவகார்த்திகேயன்

சிறந்த நடிகராக வேண்டும்.. விஜய் சேதுபதியுடன் இணைய வேண்டும்.. – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & அதிதி நடித்த ‘மாவீரன்’ படத்தின் வெற்றி விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

“இந்தப் படத்திற்கு வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு பத்திரிகையிடம் இருந்து நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது.

நான் மிமிக்ரி செய்து டிவியில் வந்தவன். காமெடி மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும். எனக்கு அப்படிதான் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்.

என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர்.

ஒரு பர்ஃபார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான்! மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

முதல் பாதி சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி எமோஷனலாகவும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் சிறப்பாக வந்திருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள். சிறந்த படத்துக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதை இதற்குக் கொடுத்திருந்தோம்.

அதை ஏற்றுக் கொண்டு வெற்றிக் கொடுத்த மக்களுக்கு நன்றி. அரசியல் கதையை அழகாக அஸ்வின் எடுத்துச் சென்றுள்ளார். படம் வெளியான முதல் நாள் மாலை நான் காஷ்மீர் சென்றுவிட்டேன். சரிதா மேம்தான் தியேட்டர் ரெஸ்பான்ஸ் குறித்து எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தார்.

உங்களுடன் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்க ஆசை. அதிதிக்கு படத்தில் குறைந்த நேரம்தான் என்றாலும் அப்படி எல்லாம் யோசிக்காமல் புரோமோஷன் வரை சின்சியராக செய்து கொடுத்தார்.

வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். முதலில் இந்தப் படத்தில் வாய்ஸ் கொடுக்க விஜய்சேதுபதி சார்தான் இயக்குநர் சாய்ஸாக இருந்தது.

எனக்கு விஜய்சேதுபதி சாருடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு. சீக்கிரம் அதுவும் நடக்கும். எனக்கும் விஜய்சேதுபதி சாருக்கும் போட்டி என்பதே கிடையாது. அவர் நடிப்பை அப்படி ரசிப்பேன். மிஷ்கின் சார், சுனில் சார், முதல் ட்வீட் போட்ட உதயநிதி சார், ரவிதேஜா சார், யோகிபாபு சாருக்கு நன்றி” என்றார்.

மாவீரன்

I wish to be performer too says Sivakarthikeyan

More Articles
Follows