சிரஞ்சீவி தம்பி மகனை திருமணம் செய்யும் சசிகுமார் பட நாயகி

சிரஞ்சீவி தம்பி மகனை திருமணம் செய்யும் சசிகுமார் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் வருண் தேஜ்.

இவர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் ஆவார்.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா.

இந்த நிலையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் ஓரிரு தெலுங்கு படங்களில் இணைந்து ஜோடியாக நடித்தனர்.

அப்போது இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.

இவர்களின் திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Varun Tej and Lavanya Tripathi to get engaged on june 9

‘தர்பார்’ படத்தை விட ‘ஜெயிலர்’ பட காமெடி வேற லெவல்.; யோகி பாபு அப்டேட்

‘தர்பார்’ படத்தை விட ‘ஜெயிலர்’ பட காமெடி வேற லெவல்.; யோகி பாபு அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

ஒரு பக்கம் காமெடியில் கலக்கி கொண்டு இருந்தாலும் மறுபக்கம் கதையின் நாயகனாக பல படங்களின் அடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான காமெடி நடிகர் தற்போது இவர் தான்.

ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் இவர் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களில் யோகி பாபு காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுபோல ‘தர்பார்’ படத்தில் ரஜினி – யோகி பாபுவின் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

எனவே ரஜினி யோகி பாபு நெல்சன் ஆகியோரது கூட்டணியில் தற்போது காமெடிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் தன்னுடைய காமெடி ட்ராக் குறித்து யோகி பாபு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

‘தர்பார்’ படத்தில் ஓரளவுக்கு ஓட்டியிருந்தோம். இந்த படத்தில் இன்னும் புல்லாவே ஓட்டியிருக்கோம்.

காமெடி வித்தியாசமாக இருக்கும். எப்போதும் உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுப்பார் ரஜினி” என யோகிபாபு கூறியுள்ளார்.

The comedy of ‘Jailor’ is on a different level than ‘Darbar’- Yogi Babu

கார்த்தி – சிம்பு – உதயநிதி பட நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் சித்தார்த்

கார்த்தி – சிம்பு – உதயநிதி பட நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காற்று வெளியிடை’, செக்கச் சிவந்த வானம்’, ஹே சினாமிகா மற்றும் ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநில மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அதுபோல தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ஆகிய இருவரும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் மும்பை ஏர்போர்ட்டில் இருவரும் விமானத்தில் வெளிநாடு பறக்க வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கோடை விடுமுறையை ஒன்றாக கழிக்க வெளிநாடு பறந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Aditi Rao Hydari flies with boyfriend actor Siddharth

மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி.. வில்லனாகும் அரவிந்தசாமி.; இயக்குனர் இவரா?

மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி.. வில்லனாகும் அரவிந்தசாமி.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தை தயாரித்தவர் நடிகர் சூர்யா. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்த இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தன் தம்பியை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார் சூர்யா. இதில் கார்த்திக்கு வில்லனாக அரவிந்தசாமி நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரும் வெற்றி பெற்ற 96 படத்திற்கு பிறகு எந்த படத்மையும் பிரேம் இயக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Again Suriya and Karthi teamsup Arvindsamy as baddie

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு சிவாஜி நடித்த ‘பராசக்தி’ சிறப்பு காட்சி

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு சிவாஜி நடித்த ‘பராசக்தி’ சிறப்பு காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் என போற்றப்படக்கூடிய சிவாஜி கணேசன் அறிமுகமான தமிழ் திரைப்படம் ‘பராசக்தி’.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1952 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி நூறாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நாளை 2023 ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தை திரையிட உள்ளது திமுக மகளிர் அணி.

இதற்கான சிறப்பு காட்சி நாளை காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் படம் திரையிடப்பட உள்ளது.

இதில் திரைப்பிரபலங்கள் & சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Karunanidhi 100 Years Parasakthi Special show

பராசக்தி பட தகவல்கள்…

நடிப்பு
சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, குமாரி கமலா

ஒளிப்பதிவு
எஸ்.மாருதி ராவ்

இசை
எஸ்.சுதர்சனம்

பாடல்கள்
சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், மு.கருணாநிதி, உடுமலை நாராயண கவி,

கதை
எம்.எஸ்.பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்
கலைஞர் மு.கருணாநிதி

இயக்கம்
ஆர்.கிருஷ்ணன், எஸ். பஞ்சு

தயாரிப்பு
ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ. பெருமாள் முதலியார்

மேடையில் பாடிக் கொண்டிருந்த நிஷாவை துப்பாக்கியால் சுட்ட நபர்.; போலீஸ் விசாரணை

மேடையில் பாடிக் கொண்டிருந்த நிஷாவை துப்பாக்கியால் சுட்ட நபர்.; போலீஸ் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய்.

சரண் மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார்.

சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பாடகி நிஷா உபாத்யாய் வந்தார். அதிகாலை வரை நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீரேந்திசிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா பாடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில், பாடகி நிஷாவின் இடதுதொடையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய தகவலின்படி, நிஷாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார், நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Bhojpuri singer Nisha Upadhyay shot at in firing during show

More Articles
Follows