லைசன்ஸ் இல்லாமல் குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய் மீது 3 வழக்கு

லைசன்ஸ் இல்லாமல் குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய் மீது 3 வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jaiஎங்கேயும் எப்போதும், சென்னை28, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்.

இவர் நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார்.

மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார்.
அடையாறு பாலம் அருகே வந்தபோது இவரது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

விபத்து பற்றி பொதுமக்கள் வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஜெய் மீது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரது ஆடி காரையும் பறிமுதல் செய்து திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகர் ஜெய்யை போலீஸார் கைது செய்து சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

மேலும் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலம் ரத்து செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

திரு. வி.க. பூங்கா பட பைனல் லுக் போஸ்டரை வெளியிட்டார் மாரியப்பன்

திரு. வி.க. பூங்கா பட பைனல் லுக் போஸ்டரை வெளியிட்டார் மாரியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thiru Vi Ka Poonga Final Poster Release (5)ஒரு படம் உருவாகும்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வருவது இப்போது டிரெண்டாகி வருகிறது.

முதன்முறையாக ஒரு படத்தின் பைனல் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர்.

அதுபற்றிய செய்தி வருமாறு….

தி பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்.

அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.

எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம்.

அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை.

சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது.

2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது.

அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.

இவ்விழாவில் மாரியப்பனை படக்குழுவினர் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தனர்.

Padma Shri Mariyaappan launched Thiru Vi Ka Poonga movie Final Look Poster

Thiru Vi Ka Poonga Final Poster Release (1)

நாலு மணி நேரத்தில் விவேகத்தை தெறிக்கவிட்ட மெர்சல்

நாலு மணி நேரத்தில் விவேகத்தை தெறிக்கவிட்ட மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal and vivegam teaserதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து சம போட்டியாளர்களாக பார்க்கப்படுவது என்றால் அது விஜய் அஜித்தான்.

எனவே விஜய் மற்றும் அஜித் படங்களின் டீசர், ட்ரைலர் வெளியானால் இதனை ஒப்பிட்டே ரசிகர்கள் தங்கள் பலத்தை நிரூபித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மெர்சல் டீசர் வெளியானது.

வெளியான 4 மணி நேரத்தில் விவேகம் லைக்ஸ் சாதனையை முறியடித்து 599K லைக்ஸ் பெற்று உலகின் நம்பர் 1 சாதனை மெர்சல் படைத்தது.

7 மணி நேரத்தில் 65 லட்சம் Views பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் விவேகம் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பெற்றதே சாதனையாக இருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினி-கமல் கட்சிகளில் இணைய மாட்டேன்… குஷ்பூ திட்டவட்டம்

ரஜினி-கமல் கட்சிகளில் இணைய மாட்டேன்… குஷ்பூ திட்டவட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont join in Rajini Kamals Political party says Kushbooநடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார். விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதுபோல் ரஜினிகாந்த்தும் ரசிகர்கள் சந்திப்புக்கு பின்னர் தன் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ அவர்கள் இதுகுறித்து கூறியதாவது…

காங்கிரஸ் கட்சியின் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. எனவேதான் அந்த கட்சியில் இணைந்தேன்.

நான் அரசியலில் இருக்கும்வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்.

கமல் என் 30 வருட நண்பர்தான். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் அதில் இணையமாட்டேன்.

அதுபோல் ரஜினி கட்சியில் இணைய அழைத்தாலும் இணையமாட்டேன்” என தெரிவித்துள்ளார் குஷ்பு.

I wont join in Rajini Kamals Political party says Kushboo

உண்மை சம்பவங்களை ஆராய்ந்து மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள ஔடதம்

உண்மை சம்பவங்களை ஆராய்ந்து மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள ஔடதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Owdatham movie audio launch and news updatesரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி.

சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்புடத்தக்கது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி, பெருதுளசிபழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ், நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பார்த்து பிரமித்த கீழக்கரை அஜ்மல்கான், இப்படத்தை வெளியிடுகிறார்.

Owdatham movie audio launch and news updates

Owdatham Movie Audio Launch Photos

தூய்மையே கடவுள்; நரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு

தூய்மையே கடவுள்; நரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth extend his support to PM Modis Clean India Campaignபிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் ரஜினிகாந்த்தும் நட்புடன் பழகி வருகின்றனர்.

இருவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதும் முக்கியமான தருணங்களில் பேசிக் கொள்வதும நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்துக்கு எனது முழுஆதரவளிக்கையும் அளிக்கிறேன். தூய்மை கடவுள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth extend his support to PM Modis Clean India Campaign

Rajinikanth‏Verified account @superstarrajini
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness.

More Articles
Follows