‘கர்ணன்’ தலைப்பை மாற்றி இந்த பெயர் வைங்க.. சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கண்டனம்

‘கர்ணன்’ தலைப்பை மாற்றி இந்த பெயர் வைங்க.. சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karnan dhanushமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத் தலைப்பு தொடர்பாக கே. சந்திரசேகரன்,
தலைவர், சிவாஜி சமூகநலப்பேரவை சேர்ந்தவர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்

அதில்…

“கர்ணன்” – இந்தப் பெயர் மகாபாரதக் கதாபாத்திரம் மட்டுமல்ல, நடிகர்திலத்தின் தோற்றம், கம்பீரம், நடை என்று பல பரிமாணங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய படம்.

இன்று, ஏதோ ஒரு கதைக்கு “கர்ணன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நமது கண்டனத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்படப் பெயர்களை பதிவு செய்யும், தமிழ் பிலிம் சேம்பர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறோம்.

ஆனாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வார இதழில் தனுஷ் நடிக்கும் “கர்ணன்”: திரைப்படத்தைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது.

அதில், “கர்ணன்” கொடுப்பவன் அல்ல. உரிமைகளைக் கேட்பவன் என்று வந்துள்ளது.

“கர்ணன்” என்றாலே கொடுப்பவன்தான். உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களைக்கூட பெயர்த்தெடுத்து தானமாகக் கொடுத்தவன். இறக்கும் தருவாயிலும், இல்லை என்று சொல்லாமல் தன்னுடைய புண்ணியங்களையெல்லாம், ரத்தத்தால் தாரை வார்த்துக் கொடுத்தவன்.

அப்படியிருக்கையில், உரிமைகளைக் கேட்கும் ஒரு கேரக்டருக்கு :”கர்ணன்” என்று ஏன் பெயர் வைக்கவேண்டும்?

“போராளி”:, “உரிமைக்குரல்” என்று வேறு ஏதாவது பெயரை வைத்திருக்கலாமே?

இவ்வாறு அவர் தன் முக நூலில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthமதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்பார் படம் வெற்றி பெற வில்லை என்பதால் வருத்தப்படுகிறார் ரஜினிகாந்த்.

ரசிகர்களிடம் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒருவேளை தர்பார் பட பிரச்சினை காரணமாக வருத்தம் தெரிவித்திருக்கலாம்.

இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வருவேன் என்றார். ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.

டெல்லியில் 47 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த இழப்புக்கு இந்துத்துவா அமைப்பே காரணம்.

ஆனால் அதை திசை திருப்பும் வகையில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி விட்டுள்ளனர்.்

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

துரத்தும் கொரானா வைரஸ்.; சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய ‘அண்ணாத்த’

துரத்தும் கொரானா வைரஸ்.; சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaatthe shootingசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த.

ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

அடுத்தக்கட்டமாக புனே மற்றும் கொல்கத்தா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் வட இந்தியாவில் கொரானா வைரஸ் பீதி அதிகமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அந்த பகுதிக்கு செல்லும் திட்டத்தை கை விட்டார் அண்ணாத்த.

இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடைபெற உள்ளதாம்.

எனவே அதற்கான செட் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம்.

வைரமுத்து மீது 13; கார்த்தி மீது 7 இப்படியிருக்க மகளிர் தினம் என்ன பயன்..? சீறும் சின்மயி.!

வைரமுத்து மீது 13; கார்த்தி மீது 7 இப்படியிருக்க மகளிர் தினம் என்ன பயன்..? சீறும் சின்மயி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthu chinmayiகடந்த வருடத்தில்கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவையில்லாமல் பல்வேறு பாலியல் புகார்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

இதனிடையே இவரை டப்பிங் யூனியனில் இருந்து அதன் தலைவர் ராதாரவி நீக்கினார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கான நியாயம் கிடைக்க எப்படி போராட வேண்டி இருக்கு? என்று சமீபத்தில் நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.

இதனையறிந்து இதற்கு பதிலளித்த சின்மயி, ‘இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நான் அளித்த புகாரால் ராதாரவி என்னை டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றினார்.

பாலிவுட் அனு மாலிக் பொதுஇடத்தில் வைத்தே 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.” என பதிலளித்துள்ளார்.

மேலும் அடுத்த பதிவில்…

நம் நாட்டில் மகளிர் தினத்தன்று தான் பெண்களை போற்றுகிறார்கள். மற்ற நாட்களில் மதிப்பது இல்லை.

அப்படிப்பட்ட மனநிலையில் தான் மிருகங்கள் இருக்கின்றன.

பாதுகாப்பை உறுதி செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்?

என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

ஒரேடியாக கேரளத்து சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

ஒரேடியாக கேரளத்து சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy sureshரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார் இவர்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் வரலாற்று கதையான ‘மரைக்கார் ‘ என்ற படத்தில் மோகன் லால் உடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதில் கீர்த்தி சுரேஷ் மலையாள சேச்சியாக மாறி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay25 வருட திரைப்பயணத்தில் நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களை, அறிவழகனுடன் இணையும் தனது புதிய படத்தில் அதிரடி ஆக்‌ஷன் மூலம் அசரடிக்க வருகிறார். இரண்டு வார கால நீண்ட படப்பிடிப்பில் பிரமிப்பான அதிரடி ஆக்‌ஷன், மயிர்க்கூச்செரியும் துரத்தல் காட்சிகள் டெல்லி மற்றும் ஆக்ராவில் இப்படத்திற்காக படமாக்கப்படவுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் பொங்கும் பாடல் காட்சிகள் யமுனா நதி கரைகளிலும், டெல்லி மற்றும் ஆக்ரா மார்க்கெட் வீதிகளில் படமாக்கப்படவுள்ளது. “குற்றம் 23” எனும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஈரம் அறிவழகன் இப்படத்தில் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைகிறார்.

இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிகர் அருண்விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். Miss Teen International 2016 புகழ் ஸ்டெஃபி படேல் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் எனும் பக்ஸ் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்வாய்ந்த ஒளிப்பதிவாளர் B ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இளம் உள்ளங்களின் நாயகன் சாம் CS இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற ஷாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். சக்தி வெங்கட் ராஜ் கலை இயக்கம் செய்கிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் சென்னை, டெல்லி, ஆக்ரா, ஹைதராபாத் பகுதிகளில் படம்பிடிக்கப்படும் இத்திரில்லர் திரைப்படத்தை விஜயராகவேந்திரா Allin Pictures சார்பில் தயாரிக்கிறார்.

More Articles
Follows