தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன், ரெமோ படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன் அழுதது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று சற்றுமுன் சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், நடிகை பூர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை பூர்ணா பேசும்போது… “நான் முதலில் டான்ஸராக தான் இருந்தேன்.
பின்னர் பரத்துடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தேன்.
அதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
எனவே மீண்டும் டான்ஸராக இருக்கலாம் என முடிவெடுத்தேன்.
ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அருமையாக கேரக்டரை இப்படத்தில் கொடுத்த, மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோருக்கு நன்றி.
ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் என்னை பெரிய திரையில் பார்க்கும் போது என் அம்மா அழுதே விட்டார்”
இவ்வாறு பூர்ணா பேசும்போது அவரும் அழுது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.