தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி.
இவர் எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் நடிகை ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பது இவர்தானாம்.
நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.
’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் வடிவேலு உடன் பாட்டியாக நடித்திருந்தார்.
இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்துள்ளார்.
எனவே வறுமை இவரே வாட்டவே சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்புவிற்று வந்துள்ளார்.
தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது சில நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் உதவி செய்தனர்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாகவும் வறுமை காரணமாகவும் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்துக்கு சென்றுவிட்டார்.
அங்குதான் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார்.
Veteran Actress Rangamma passes away