தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தில் படப்பிடிப்பிற்காக கேரளாவில் தங்கி இருக்கிறார்.
ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினியை சந்தித்துள்ளனர் 2018 படக்குழுவினர்.
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“என்ன ஒரு அற்புதமான படம் ஜூட். எப்படி படமாக்கினீர்கள்? அட்டகாசமான படைப்பு.
ஆஸ்கர் விருதுக்கான ஆசீர்வாத்ததை உங்களிடமிருந்து பெற்றோம். “போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்” என நீங்கள் (ரஜினி) சொன்னது மறக்க முடியாது. மறக்கமுடியாத வாய்ப்பு. இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சௌந்தர்யாவுக்கு நன்றி”
என பதிவிட்டுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
2018 movie team met Rajini and got blessing