தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை நவம்பர் 3ஆம் தேதி ரஜினியின் 2.0 பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ரூ. 500 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி வாங்கியுள்ளதால் இந்த நிகழ்ச்சியை நாளை காலை 10 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர்.
சத்யம் தியேட்டரில் இந்த டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், லைகா சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்பிரபலங்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
ரஜினி மற்றும் அக்சய் ஆகியோருடன் பிரபலங்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாம்.
இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டு உள்ளதால் எவரும் அனுமதி அட்டை (என்ட்ரி பாஸ்) இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள தியேட்டர்களில் காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.