தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சோகம்; 2.0 டீசரை ஒத்தி வைக்க ரஜினி உத்தரவு..?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சோகம்; 2.0 டீசரை ஒத்தி வைக்க ரஜினி உத்தரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 teaserலைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் 2.0.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

எனவே இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் இம்மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபில் கிரிக்கெட் இறுதிபோட்டியில் இதன் டீசர் வெளியாகவிருந்தது.

தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சோகம் தமிழகத்தில் நிலவிவருவதால் இந்த நேரத்ததில் 2.0 டீசரை வெளியிட வேண்டாம் என ரஜினி தரப்பிலிருந்து லைகா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே டீசர் இப்போது வெளியாக வாய்ப்பில்லை.

அராஜக தமிழக அரசை மன்னிக்கவே முடியாது.. – கார்த்தி

அராஜக தமிழக அரசை மன்னிக்கவே முடியாது.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karthiதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பலர் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து…

“ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும்.

ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை, அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாமற்றது; நேர்மையற்றது.

எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

மக்களைக் காப்பதுதானே காவல்துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல்துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க முடியாதது.

மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

சுற்றுச்சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும், அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம், நல்ல மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை, மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். நடந்த பெரும் துயரத்துக்கு, அரசு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக, நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும், அந்தத் துயரில் இருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப்போய் உதவ வேண்டும். போராடுவது, மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை, அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். ‘மக்கள் போராட்டக் களத்துக்கே வரக்கூடாது’ என அரசு நினைப்பது தவறு.

மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது” என கார்த்தி தெரிவித்துள்ளார்.

விமர்சகருக்கு பொறுப்பு வேண்டும்; ப்ளு சட்டை மீது காளி டைரக்டர் கிருத்திகா கடுப்பு

விமர்சகருக்கு பொறுப்பு வேண்டும்; ப்ளு சட்டை மீது காளி டைரக்டர் கிருத்திகா கடுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaaliவிஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான படம் காளி.

இப்படத்தை பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.

ப்ளு சட்டை மாறன் என்பவரும் வழக்கம்போல விமர்சனம் செய்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் கிருத்திகா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு படத்துக்கு விமர்சனம் என்பது முக்கியம் ஆனால் படத்தை நன்கு ஆராய்ந்து இது நல்ல இருந்தது,

இது ஒர்கவுட் ஆகவில்லை என்று சூட்டிக்காட்டினால் தானே எங்களுக்கு தெரியும், காளி படத்தில் மூன்று கதையிலும் ஒரு விஷயத்தை கனெக்ட் செய்கிற மாதிரி வைத்திருப்பேன்.

இதுபற்றி எந்த விமர்சகரும் கூறவில்லை, இடது கை உடையவர் பற்்ற்்றி

சொல்ருப்பேன்,

பார்வதி என்ற ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லிருப்பேன், டின்ஏ பற்றி சொல்லிருப்பேன் என பல விஷயங்கள் உள்ளது.

விமர்சனம் பண்ணும்போது ஒரு பொறுப்பு வேண்டும்.

உங்கள் விமர்சனம் எல்லாம் ஒரே மாதிரி உள்ளது என்று தனது வருத்தத்தை கிருத்திகா தெரிவித்துள்ளார்.

Breaking: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; போலீசுக்கு ரஜினி கடும் கண்டனம்

Breaking: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; போலீசுக்கு ரஜினி கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று 100வது நாளில் கலவரமாகி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

போலீஸின் இந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் ரஜினிகாந்த் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சம்பவம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது..

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்…” என பேசியுள்ளார்.

Breaking: உயிரிழப்புக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்…; கண்கலங்கிய கமல்

Breaking: உயிரிழப்புக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்…; கண்கலங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan demands sterlite industry to be shutதூத்துக்குடி மாவட்ட மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 100 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று 100வது நாள் போராட்டத்தில் இது பெரும் கலவரமானது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்.

அவர்களை கண்டதும் கமலும் கண் கலங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது…

இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? என்று இதுவரை தெரியவில்லை. முதலில் அதை தெரியப்படுத்தியாக வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு பேரம் பேசி பயனில்லை. அவர்களின் உயிரிழப்புக்கு மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான்.

மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது நடுநிலையான மருத்துவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்.

இதை இப்படியே விட்டு விட்டு போக முயாது.” என கண் கலங்கிய படியே கமல் பேசினார்.

குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaதூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது.

இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது.

பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு முன்னிறுக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

மஹாராஷ்டிரா நிராகரித்த ஆலை

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக்கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலப் போராட்டம்.

மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

“ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ்டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது.

மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

குப்பைத்தொட்டியா தமிழகம்?

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது.

தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன.

நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியின் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிற ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ’நியூட்ரினோ திட்டம்’ என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படையில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள்.

தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக்கூடைக்குள் தூக்கி எறிவதைப்போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டங்களை “பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை” என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம்.

உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?

மக்களுக்கு மதிப்பளியுங்கள்

ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது.

ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம்.

‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!”

என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சூர்யா.

More Articles
Follows