தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுனராக கிரண்பேடி பதவியேற்றார்.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டரில்… “தங்கள் வீடுகளில் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் ரஜினியின் ‘கபாலி’ பட டிக்கெட்டுகளை பரிசாக வழங்க மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டிருக்கிறார்” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும்.
அதுபோல், தூய்மை இந்தியா பிரசாரத்துக்காகவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு தூதராகவும் அவரை நியமிக்க வேண்டும்.
அப்படி செய்தால், புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக முன்னேற்றலாம்” என தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.