தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் பிரபலமான மாகாபா ஆனந்த், தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எனவே தற்போது தனது வழியை ரஜினி வழியாக மாற்றிக் கொண்டு ‘மாணிக்’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.
இதில் முழுக்க முழுக்க பாட்ஷா பட ஸ்டைல் ரஜினியாக மாறியிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இதில் நாயகியாக சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
தரண்குமார் இசையமைக்க இப்படத்தை மோஹிதா ஃபிலிம்ஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.