தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.
டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒன்றாக மேடையேறினர்.
அப்போது கமல் பேசியதாவது…
“பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். அதன் பிறகு நாங்களும் அந்த படத்தை உருவாக்க முயன்றோம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இன்று மணிரத்னம் அது நிறைவேற்றி இருக்கிறார்” என பட குழுவினரை வாழ்த்தினார் கமல்ஹாசன்.
அதன் பின்னர் ரஜினி பேசியதாவது…
எல்லாரும் பொன்னியின் செல்வன் நாவல் படிச்சிட்டீங்களா நாவல் படித்து விட்டீர்களா? என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.
நான் ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினால் முதலில் அதில் எத்தனை பக்கங்கள் இருப்பது என்பதை பார்ப்பேன்? ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் 2000 பக்கங்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அது படிப்பதை தவிர்த்து வந்தேன்.
அப்போது குமுதம் வார இதழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று இருந்தது. அதில் வாசகர் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்து இருந்தார்.
அதில் ஒரு வாசகர் இப்போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டால் அதில் வந்தியத் தேவன் கேரக்டர் யார் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஜெயலலிதா ரஜினிகாந்த் நடிக்கலாம் என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு தான் எனக்கு பொன்னின் செல்வன் நாவல் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. படித்தேன் படித்தேன் படித்தேன். அதில் மூழ்கி விட்டேன் அவ்வளவு சிறப்பான நாவல்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்
Kamal and Rajini mass speech at PS1 Trailer Launch