தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 50 நாட்களாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடந்து வந்ததால் தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.
ஆனால் வசனங்களே இல்லாத மெர்க்குரி படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ரிலீஸ் செய்தார் இதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ்.
அதன்பின்னர் ஸ்டிரைக் முடிவுக்கு வரவே, ஏப்ரல் 20ஆம் தேதி அப்படம் தமிழகத்திலும் வெளியானது.
வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லராக உருவான இப்படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையிலேயே பயணித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜனிகாந்த் படக்குழுவினரை தன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார்.
படம் குறித்து ரஜினி கூறும் போது, பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் சிறந்த படம் என்று பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதை கார்த்திக் சுப்புராஜ்தான் இயக்கவுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையைமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Rajinikanth praises Karthik Subbarajs Mercury movie and his team