தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
படத்தின் எல்லா கேரக்டர்களுக்கும் சூரி அறிமுகம் செய்து வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார். ஆனால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை.
ஹீரோ ரமீஸ் ராஜா அடிக்கடி கனவு வருகிறது. அவர் கனவு படியே சில நிகழ்வுகள் நடக்கிறது.
அதாவது இவருடைய தந்தை ஒரு வீட்டு புரோக்கருக்கு கமிஷன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்.
எனவே அவர்கள் ரமீஸை கடத்தல் திட்டமிடுகின்றனர். மற்றொரு கும்பல் இவரின் ஒன் சைட் காதலி ஜனனியை கடத்த திட்டமிடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் சண்டையிடும்போது வில்லன் டேனியல் பாலாஜியின் தம்பி கொல்லப்படுகிறார்.
அதனால் டேனியல் பாலாஜி இரண்டு குடும்பங்களை பலி தீர்க்கிறார். இவை எல்லாம் கனவாக வருகிறது.
இந்த காட்சி ஒன்றன்பின் ஒன்றாக நடக்கத் தொடங்குகிறது.
இந்த விதியை அவர் தன் மதியால் எப்படி வென்றார் என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
துறுதுறுவான நடிப்பாலும், வெகுளித்தனமான நடிப்பாலும், ரசிகர்களை கவர்கிறார் ரமீஸ் ராஜா.
கனவு நிறைவேறாமல் இவர் தடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.
ஜனனி ஐயர் அழகிய நடிப்பாலும் பாதி கண்களாலும் கதை பேசி விடுகிறார்.
வில்லத்தனத்தில் டேனியல் பாலாஜி எப்போதும் மிரட்டுவார். ஆனால் இதில் கொஞ்சம் கம்மிதான்.
இவர்களுடன் கருணாகரன், சென்ட்ராயன், ஞானபிரகாசம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் கதையோட்டத்தை தங்கள் காமெடியால் அழகாக நகர்த்தியுள்ளனர்.
இரண்டு கும்பலும் கடத்தல் பங்களாவில் சந்திக்கும் காட்சிகள் செம அப்ளாஸ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘தாறு மாறா…’ என்ற பாடல் ஓகே.
கருணாகரன் மற்றும் அந்த கும்பலுக்கான நடனம் செம மாஸ். அதை படமாக்கிய விதமும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு விருந்து.
கனவை சொல்லிவிட்டு காட்சிகளை நகர்த்திய விதம் அருமை. இயக்குனர் விஜய் பாலாஜி அங்கேயே தன்னை நிரூபித்து விடுகிறார்.
கனவையும் நிஜத்தையும் காமெடியுடன் சொல்லி ரசிகர்களை கவர்கிறார்.
விதி மதி உல்டா.. நிச்சயம் ரசிக்கலாம்