தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர்.
தமிழக முதல்வர் நாசர் ஒரு ஊழல் புகாரில் சிக்குகிறார். இதனால் பதவி விலக நேரிடுகிறது.
எனவே கட்சிக்கார்ர்களையும் தன்னுடன் இருக்கும் மந்திரிகளையும் நம்பாமல் 2 வாரத்திற்கு மட்டும் டம்மி CM ஆக தன் மகன் விஜய் தேவரகொண்டாவை நியமிக்க சொல்கிறார்.
வேறு வழியில்லாமல் எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளிக்க கவர்னர் முன் பதவி ஏற்கிறார்.
ஆனால் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.
2 வார முடிவில், நாசருக்கு சிறை தண்டனை உறுதியாகுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்க, சட்டம் ஒழுங்கு கெடுகிறது.
அதன் பின்னர் தன் பொறுப்பை உணர்ந்து, மூத்த பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனை பேரில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார் விஜய்.
இதனால் முதல்வருக்கு நல்ல பெயர் மக்கள் மத்தியில் கிடைக்கிறது.
அதன் பின்னர் ஜாமீனில் வெளிவருகிறார் நாசர். அப்போது அவரை ஒரு கும்பல் கொல்ல திட்டமிடுகிறது.
அதில் இருந்து நாசர் தப்பித்தாலும் சுய நினைவை இழக்கிறார்.
அப்போது 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் வர, அதில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் விஜய் தேவரகொண்டா.
அப்போது நாசருக்கு சுய நினைவு வந்தாலும் அதை தன் கட்சியிடமே மறைத்து பதவி ஏற்கிறார்.
மேலும் சில ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதே நடவடிக்கைகள் எடுக்கிறார்.
இதனால் நாசருக்கும் விஜய்க்கும் மோதல் உருவாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இதை எல்லாம் மீறி விஜய் நல்லது செய்தாரா? ஆட்சி என்ன ஆனது? நாசர் என்ன செய்தார்..? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
இளைய முதல்வராக விஜய் தேவரகொண்டா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் முதல்வர் ஆகிறார். ஆனால் அதில் ஏமாற்றமே.. ரசிகர்களுக்கும்தான்.
மெஹ்ரீன், சஞ்சனா என 2 ஹீரோயின்ஸ் இருந்தும் படத்தில் ரொமான்ஸும் இல்லை.
சஞ்சனாவை ஆரம்பத்தில் கனிமொழி ரேஞ்சில் காண்பித்து அவரையும் டம்மியாக்கி விட்டார்கள்.
யாசிகா ஆனந்த் ஒரு காட்சியிலும் கருணாகரன் ஓரிரு காட்சியிலும் வருகிறார்கள். அவ்வளவுதான்.
பக்கா அரசியல்வாதியாக நாசர் அருமை. தனக்கான கேரக்டரில் நிறைவை தருகிறார். ப்ளாஷ்பேக் தவிர.
சத்யராஜ் கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜஸ்ட் அட்வைஸ் மட்டும் செய்கிறார். அமைதிப்படை-யில் அல்வா கொடுத்தவருக்கு இப்படி ஒரு அவலநிலையா..?
எம்எஸ். பாஸ்கரின் கேரக்டர் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை நினைவு படுத்தும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியாது என்பது போல திமுக. வை நினைவுப்படுத்துகிறார்.
இதில் சத்யராஜுக்கு லவ் ப்ளாஷ்பேக் வேற. அதில் நாசருக்கும். ஆனால் எடுபடவில்லை.
தமிழக அரசியலையும், ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சுற்றியே கதை நகர்கிறது.
கூவத்தூர், சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஜெயா மருத்துவமனையில் அனுமதி, ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.
சாம் இசையில் பாடல்களும் ரசிக்கும்படியாக இல்லை. மினிஸ்டர் பாடல் ஓகே ரகம். பின்னணி இசையும் சுமார்தான்.
கட்சி ஆபிஸ், அமைச்சர்கள், தொண்டர்கள் என எப்படி எல்லாமோ கெத்து காட்டியிருக்க வேண்டிய படத்தை லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளார் ஞானவேல்ராஜா.
முதல்வர் வருகிறார் என்றால் நூற்றுக்கணக்கான பேனர்கள் இருக்க வேண்டாமா..? பெயருக்கு பேனர்களை காட்டுகிறார்கள்.
கலவர காட்சி, ஊழல், சாமியார், ஆற்றங்கரையில் சாமியார் ஆக்ரமிப்பு என கதையை எங்கெங்கோ கொண்டு செல்கிறார்.
முக்கியமாக நோட்டா என்றால் என்ன.? ஆட்சியாளர்கள் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு ஓட்டுப் போன பயன்படுத்தும் ஆயுதம்தானே.. ஆனால் அதை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.
நோட்டா… சாரி சி.எம். டாட்டா…