கந்து வட்டி கலாட்டா… பொது நலன் கருதி விமர்சனம்

கந்து வட்டி கலாட்டா… பொது நலன் கருதி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா, யோக் ஜபி, பாபு ஜெயன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை – ஹரி கணேஷ்
இயக்கம் – சீயோன்
ஒளிப்பதிவு – சுவாமிநாதன்
எடிட்டிங் – கிரேசன்
தயாரிப்பு – எவிஆர் புரொடக்ஷன்ஸ்
வெளியீடு – பிடி. செல்வகுமார்
பிஆர்ஓ – ராஜ்குமார்

podhu nalan karudhi 1

கதைக்களம்…

வட்டிக்குப் பணம் கொடுத்து மக்களை மிரட்டி தங்கள் கைக்குள் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களை பற்றிய கதை தான் இது.

வட்டிக்கு பணத்தை கொடுத்து, அவற்றை சொன்ன தேதிக்குள் கொடுக்கவில்லை என்றால் அதைக் கறாராக வசூலிப்பவர் யோக் ஜபி.

அவரிடம் அடியாளாக வேலை பார்ப்பவர்களில் முக்கியமானவர் சந்தோஷ். ஒரு கட்டத்தில் பிரச்சினையாகி சந்தோஷ் வெளியே செல்ல, இருவருக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது.

மற்றொரு நடிகர் கருணாகரன். இவருடைய அண்ணன் காணாமல் போக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு நாயகன் அருண் ஆதித். இவர் தன் காதலிக்காக யோக் ஜபியிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்க வட்டிக்கு பணம் வாங்குகிறார்.

பின்னர் அடைக்க முடியாமல் பிரச்சினை வருகிறது.

இதனிடையில் மற்றொரு தாதாவான பாபு ஜெயன் தன் போட்டியாளர் யோக் ஜபியைக் கொல்லத் துடிக்கிறார்.

இந்த நால்வருக்குள் நடக்கும் விஷயங்கள்தான் இப்படத்தின் கதை.

podhu nalan karudhi 2

கேரக்டர்கள்…

நாயகன் சந்தோஷ்க்கு இது முக்கியமான படமாக இருக்கும். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க அடிக்கிறார். தன் தொழிலுக்காக காதலியை விட்டுச் செல்வதில் தனித்து நிற்கிறார்.

இவரின் காதலியாக வரும் லிசா கொஞ்சம் நேரம் என்றாலும் குடும்பத்திற்காக காதலை துறப்பதில் சில பெண்களை பிரதிபலிக்கிறார்.

கருணாகரன் படம் முழுவதும் கடுகடுப்பாகவே வருகிறார். காமெடி நடிகரை இப்படி பண்ணிட்டாரே டைரக்டர்.

இவரின் காதலியாக வரும் அனு சித்தாரா ரசிக்க வைக்கிறார். அழகுடன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அருண் ஆதித் மற்றும் சுபிக்ஷா ஜோடி ரசிகர்களை ஈர்ப்பார்கள். ஆனால் சுபிக்ஷா இவரை லவ் செய்கிறாரா? என்பதை கடைசி வரை யூகிக்கவே முடியவில்லை.

வில்லனாக வந்தாலும் யோக் ஜேபி மிரட்டியிருக்கிறார். அவருக்கு படத்தில் பில்டப் அதிகமாக இருக்கிறது. இவரின் சின்ன வீடு இளைஞர்களை ஈடேற்றுகிறார்.

podhu nalan karudhi 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹரி கணேஷ் இசையில் பாடல்கள் விட பின்னணி இசை பேசப்படும். லவ் ப்ரேக் அப் சாங் நீ ஒன்றும் கற்போடும் பாடல் புதுவிதம் அனுபவம்.

சுவாமிநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. எடிட்டர்தான் நம் பொறுமையை சோதிக்கிறார். கதை ஓட்டத்தை சரியாக கொண்டு சென்றிருந்தால் படத்தை முழுமையாக ரசித்திருக்கலாம்.

தன் அவசர தேவைக்காக ரூ. 10 ஆயிரம் பணத்தை வட்டிக்கு வாங்கிவிட்டு 1 லட்சம் வட்டி கட்டும் நடுத்தர குடும்பங்களை அப்படியே காட்டியுள்ளார்.

அவர்கள் கட்ட முடியாமல் தவிப்பதும் வட்டிக்கு கொடுத்தவர் மிரட்டல் விடுப்பதும், அவர்களுக்குள் நடக்கும் அரசியல் ஆட்டம் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளார் சீயோன்.

ஆனால் படத்தில் ஒருவரின் முகத்தில் கூட கொஞ்சம் கூட புன்னகை இல்லை. கருணாகரன் ஜோடி மட்டும் ஆரம்பத்தில் நிதானமாக இருப்பார். படத்திற்கு ஏற்ப அவரும் கடுகடுப்பாக இறுதியில் காட்டப்படுகிறார்.

கந்து வட்டி கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர்கள் எல்லார் முகத்திலும் கடுகடுப்பு இருப்பது நமக்கே வெறுப்பாக இருக்கிறது.

பொது நலன் கருதி என தலைப்பு இருந்தாலும் படத்தில் சுயநலனே அதிகமாக உள்ளது. பொது நலன் கருதி என்ன செய்தார்கள்? என்பதே தெரியவில்லை.

ஒருவேளை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என இந்த தலைப்பை டைரக்டர் வைத்திருப்பாரோ? என்ற சந்தேகம் வருகிறது.

மொத்தத்தில் `பொது நலன் கருதி’.. கந்து வட்டி கலாட்டா

Podhu Nalan Karudhi review rating

டீன் ஏஜ் நட்பும் காதலும்… சகா விமர்சனம்

டீன் ஏஜ் நட்பும் காதலும்… சகா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சரண், பாண்டி இருவரும் நண்பர்கள். நட்பு என்ற உறவைத் தவிர இவர்களுக்கு யாரும் இல்லை.

இவர்களை வளர்த்த அம்மாவைக் கொன்றவர்களை இவர்கள் கொல்கிறார்கள். எனவே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு (ஜெயிலுக்குள்) செல்கிறார்கள்.

அங்கு பெண்களைக் கடத்தி விற்கும் பிருத்விராஜ் உடன் மோதுகிறார்கள்.

இதனால் பாண்டியை சிறைக்குள்ளேயே கொன்று விடுகிறார் பிருத்வி. சில நாட்களில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி சென்றுவிடுகிறார்.

தன் நண்பனைக் கொன்றவனை சிறையிலிருந்து தப்பித்து கொல்ல வேண்டும் எனத் துடிக்கிறார் சரண். அவனுக்கு மற்றொரு சிறை நண்பன் கிஷோர் உதவுகிறார்.

அதாவது ஒருவன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க நினைக்கிறார். மேலும் அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க நினைக்கிறார்.

மற்றொருவர் காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.

அவர்கள் நினைத்ததை செய்து முடித்தார்களா? தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா? போலீஸ் என்ன செய்தனர்? கண்டு பிடித்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை ஆகும்.

கேரக்டர்கள்…

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வடசென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தவர்தான் சரண்.

‘பசங்க’ படத்தில் நம்மை கவர்ந்த கிஷோர், ஸ்ரீராம். இதில் கிஷோர் அப்பாவி, ஸ்ரீராம் கோபக்காரன். பிருத்விதான் படத்தின் வில்லன். ஆனால் வில்லத்தனம் இல்லை.

படத்தில் எல்லாரும் எப்போதும் முறைத்துக் கொண்டே இடைவேளை வரை படத்தை ஓட்டி விட்டுள்ளனர்.

ஆய்ரா மற்றும் நீரஜா என இரண்டு அழகான நாயகிகள் உள்ளனர். இவரும் நல்ல தேர்வு. இருவருக்கும் ஓரிரு டயலாக்குகளே உள்ளன.

மேலும் இந்த வயசுப் பையன்களை விட மூத்தவர்கள் போல் அதாவது அக்கா போல் உள்ளனர்.

ஜோக்கர் படத்தில் நடித்த அபிராமி அவர்கள் இதில் சரணின் அக்காவாக நடித்துள்ளார். அவருக்கு ஓரிரு காட்சிகளே உள்ளது. அதுவும் படத்தின் ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வழக்கம் போல சிறை வார்டனாக தீனா. உருட்டி மிரட்டுகிறார். சின்ன பசங்களிடம் அடிக்கடி அடியும் வாங்குகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷபீரின் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பல இடங்களில் ஓவர் இரைச்சலை கொடுத்து நம்மை கடுப்பேற்றுகிறார்.

கால் செருப்பு, டிரெஸ் என எதை காண்பித்தாலும் பின்னணை இசையை போட்டுள்ளார்.

ஆனால் யாயும், ஆத்தாடி பாடல்களால் நம்மை ஈர்த்து விடுகிறார். யாயும் பாடல் ஏற்கெனவே பல இளைஞர்களின் காலர் டியூனாக உள்ளது.

நிரன்சந்தர் ஒளிப்பதிவு பேசப்படும். ஹரிஹரன் படத்தொகுப்பில் முதல் பாதியில் நிறைய வெட்டியிருக்கலாம்.

ஒருவனின் கதை, மற்றொருவனின் கதை என மாற்றி மாற்றி காட்டியிருப்பதால் படம் மனதில் நிற்க மறுக்கிறது.

ஐந்து பையன்களிடமும் இயக்குனர் முருகேஷ் நன்றாக வேலை வாங்கியுள்ளார்.

சகா…. டீன் ஏஜ் நட்பும் காதலும்

நீங்க வாங்க.. ஆனா நாங்க..? வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

நீங்க வாங்க.. ஆனா நாங்க..? வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், மகத், சுமன், யோகிபாபு, விடிவி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
எடிட்டிங் – என் பி ஸ்ரீகாந்த்,
இசை – ஹிப்ஹாப் ஆதி
பாடல்கள் – ஹிப் ஹாப் ஆதி, கபிலன், அறிவு
இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – லைகா
பிஆர்ஓ – ரியாஸ் கே அகமது

Vantha Rajavathaan Varuven Movie Stills (29)

கதைக்களம்…

மிகப்பெரிய கோடீஸ்வரர் நாசர். தமிழரான இவர் தன் மகன் சுமன், பேரன் சிம்பு உடன் வசிக்கிறார்.

இவரின் மகள் ரம்யா கிருஷ்ணன். மருமகன் பிரபு.

தன் மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டதால், அவரை வெறுத்து, அசிங்கமாக திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

ஆனால் அதன் பின்னர் வருந்தும் நாசர், தன் மகளை பார்க்க வேண்டும் என 20 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.

தன் கடைசி ஆசையாக மகளை பார்க்க வேண்டும். அவளை இங்கே அழைத்து வாருங்கள் என தன் பேரன் சிம்புவிடம் கோரிக்கை வைக்கிறார்.

இந்தியாவுக்கு செல்லும் பேரன், வந்தா அத்தையோடு தான் வருவேன் என சொல்லி கிளம்புகிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? அத்தையை அழைத்து வந்தாரா? எப்படி அவரின் மனதை மாற்றினார்? என்பதே மீதிக்கதை.

Vantha Rajavathaan Varuven Movie Stills (18)

கேரக்டர்கள்…

செக்கச் சிவந்த வானம் படத்தில் வைத்திருந்த கெட்அப்பையே இந்த படத்திலும் மெய்ன்டெய்ன் செய்துள்ளார் சிம்பு. அடிதடிகளில் அனல் பறக்க அசத்துகிறார் சிம்பு.

அத்தை மகள்கள் கேத்ரீன் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் உடன் ரசிக்க ரசிக்க ரொமான்ஸ் செய்துள்ளார்.

எல்லா காதலுக்கு நான் உதவி செய்றேன். ஆனா எனக்கு காதலியே இல்லை என்று பேசி தன் ரசிகர்களை கவர்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு விரல் வித்தைகளை காட்டி, பன்ச் டயலாக் எல்லாம் பேசியிருக்கிறார். க்ளைமாக்ஸில் அத்தையை உருக வைக்க சென்டிமெண்ட் டயலாக் பேசியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடனே வருகிறார். இவரின் கணவராக பிரபு. இவர் முகத்திலும் சிரிப்பே இல்லை.

மொட்டை ராஜேந்திரன், விச்சு, கௌதம், அபிஷேக். நாசர், சுமன், ராதாரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

விடிவி கணேஷ், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் இருப்பதால் சில காட்சிகளில் சிரிக்க வைத்துள்ளனர். கெஸ்ட் ரோல் மாப்பிள்ளையாக மகத் நடித்துள்ளார்.

கேத்ரீன் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் என டபுள் நாயகிகள். இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர். இதை போட்டியை நடிப்பில் காட்டியிருக்கலாம்.

மேகா ஆகாஷ் கவர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். ஆனால் எல்லா டயலாக்குக்கும் ஒரே மாதிரியாக ரியாக்சனே கொடுத்துள்ளார்.

Vantha Rajavathaan Varuven Movie Stills (3)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹிப் ஹாப் ஆதி இசையில் பின்னணி இசை சில இடங்களில் பேசப்படுகிறது. ஓரிரு பாடல்களே கேட்க முடிகிறது.

வாங்க மச்சான் வாங்க… வந்தா ராஜாவாதான் வருவேன் பாடல் வழக்கமான சுந்தர் சியின் குடும்ப பாடலாக உள்ளது.

எனக்கா ரெட் கார்டூ எடுத்து பாரு என் ரெக்கார்டு… பாடல் சிம்புக்காகவே எடுத்து வைக்கப்பட்ட ரெடிமேட் டிரெஸ் போல உள்ளது.

மாடர்ன் முனியம்மா உள்ளிட்ட பாடல்கள் சுவாரஸ்யம் இல்லை.

”சிங்கத்தோட நின்னு செல்ஃபி எடுக்கணும்னு ஆசைப்பட்டா செல்ஃபி இருக்கும்… நீ இருக்க மாட்டே”, ”கெத்துதான் சொத்து”,  ” நீ வேஷம் போடுற ராஜா நான் பொறந்ததுல இருந்தே ராஜா” என்ற செல்வபாரதியின் வசனங்கள் ரசிகர்களை ஈர்க்கும்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது. ஆனால் எடிட்டிட்டர் இருக்காரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எடிட்டர் என் பி ஸ்ரீகாந்த் அவர்கள் யோகிபாபுவின் நாடக காட்சிகளை கண்ணை கட்டிக் கொண்டே வெட்டியிருக்கலாம். முடியலடா சாமி.

தன் குடும்ப படங்களில் ஒரு வழக்கமான டெம்ப்ளேட் வைத்திருப்பார் சுந்தர் சி. அதுபோல இதையும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் கொடுத்துள்ளார்.

ரஜினியின் மாப்பிள்ளை, விஷாலின் ஆம்பள என மாப்பிள்ளை மற்றும் அத்தை மோதல் பட மசாலாக்களை கலந்துக் கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமா ரீமேக் இந்த படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களை குறி வைத்தே படத்தை இயக்கியுள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன்… நீங்க வாங்க.. ஆனா நாங்க..?

Vantha Rajavathaan Varuven review rating

First on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்

First on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் (திருநங்கை), சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, தயாரிப்பாளர்கள் ஜேஎஸ்கே, பி.எல். தேனப்பன் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை – யுவன் சங்கர் ராஜா,
பாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – சூர்ய பிரதமன்

இயக்கம் – ராம்
தயாரிப்பு – பி.எல். தேனப்பன்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது சிறுமி (சாதனா). அவரை வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடும் ஒரு தந்தை மம்மூட்டி.

இந்த இருவரின் வாழ்க்கையும் இயற்கையும் தான் படத்தின் வாழ்வியல்.

கேரக்டர்கள்…

வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எப்படியெல்லாம் ஒரு தந்தை வளர்க்க வேண்டும் என்பதையும் அதுவும் அவள் பருவ வயதை அடைந்துவிட்டால் அதன்பின்னர் அவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்ல அமுதவனாக வாழ்ந்திருக்கிறார் மம்முட்டி.

ஒரு காட்சியில் வயதுக்கு வந்த தன் மகளுக்கு உடை மாற்றும் காட்சியில் தன் முகத்தையே நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த வயதில் செக்ஸ் பற்றி மகளுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது முதல் ஒவ்வொரு அப்பாவின் உணர்வுகளை கொட்டியிருக்கிறார் இந்த மெகா நடிகன் மம்முட்டி.

தங்க மீன்கள் சாதனா… வாத நோயால் பாதிக்கப்பட்ட பெண் இப்படிதான் இருப்பாளோ? என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். எப்படிதான் படம் முழுவதும் அந்த கைகள் கால்கள் முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ தெரியவில்லை.

தேசிய விருது இவரை நிச்சயம் தேடி வரும். கொண்டாட்டத்திற்கு காத்திருப்போம்.

அழகு, நடிப்பு, யதார்த்தம், அன்பு என அசத்தியிருக்கிறார் அஞ்சலி.

சமுத்திரக்கனி, வடிவுக்கரசு, லிவிஸ்டன் ஆகியோருக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் நடிப்பில் அனைவரும் கச்சிதம்.

அதுவும் திருநங்கையாக வரும் அஞ்சலி அமீர் நடிப்பில் சபாஷ் போட வைத்துள்ளார். நாயகன் நம்மை கட்டிக் கொள்வாரா? என்பதை யோசித்து கொண்டே அவர் காட்டும் முகபாவனைகள் செம.

திருநங்கை பிறப்பால் அவர் அவமானப்படும் காட்சிகளும் அருமை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கொடைக்கானலில் பல காட்சிகளை படம் பிடித்துள்ளார் தேனி ஈஸ்வர். ஒவ்வொரு காட்சியை காட்டும்போது பனி விலக காத்திருப்பது நம்மை இன்னும் ஈர்க்கிறது.

தன் இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியுள்ளார் யுவன். செத்து போச்சு மனசு என்ற பாடலை கேட்டால் நமக்கும் அப்படிதான் தோன்றும். தூரமாய் மற்றும் அன்பின் அன்பே பாடல்கள் இனிமை.

இயக்கம் பற்றிய அலசல்…

இயற்றை அதிசயமானது… இயற்கை கொடுரமானது… இயற்கை புதிரானது என 12 அத்தியாயங்களை காட்டி இறுதியில் இயற்கை பேரன்பானது என படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் ராம்.

12 அத்தியாயங்கள் என்றாலும் அதை போராடிக்காமல் ஒவ்வொரு முறையும் இயற்கையும் இந்த சமூகமும் நம்மில் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இன்ச் பை இன்ச் சொல்லியிருக்கிறார்.

கை முதல் கால்கள் வரை எந்தவித குறைபாடும் இன்றி நம்மில் பலர் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாம் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர செய்திருக்கிறார் டைரக்டர் ராம்.

வெறும் உணர்வுகளை மட்டும் சொல்லாமல், செக்ஸ் கல்வியின் அவசியம், திருநங்கைகளுடன் இல்லறம் என பல சிந்தனைகளை பேசியிருப்பது சிறப்பு.

பேரன்பு… அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…

First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், , குமரவேல், திவ்யதர்ஷினி (விஜய் டிவி டிடி) மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – ரவி யாதவ்
இசை – ஏஆர் ரஹ்மான்,
பாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – ஆண்டனி

இயக்கம் – ராஜீவ் மேனன்
தயாரிப்பு – மைண்ட் ஸ்கீரீன் பிலிம்ஸ் இன்ஸ்டியூட்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

நம்பர் 1 மிருதங்க வித்வானாக திகழ்கிறார் நெடுமுடி வேணு. கூடவே கொஞ்சம் திமிரிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

சிம்பிளாக சொன்னால்… மிருதங்க வாசிக்க தன் விரல்களே தனக்கு எல்லாம் என்பதால் மற்றவரிடம் கை குலுக்குவதை கூட தவிர்ப்பவர் இவர். இவரிடம் தாளம் பயில பலர் காத்துக் கிடக்கின்றனர்.

இவருக்கு மிருதங்களை செய்துக் கொடுக்கும் குமரவேலின் மகன் ஜிவி. பிரகாஷ் இவரிடம் தாளம் பயில ஆசைப்படுகிறார்.

ஏற்கெனவே அவனிடமும் இசை ஆர்வம் இருப்பதால் கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார் நெடுமுடி வேணு.

ஆனால் கீழ்ஜாதியை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் தன் குருவிடம் பயில்வதை தாங்க முடியாத வினீத் சில பிரச்சினைகளால் வெளியேறுகிறார்.

தன் குருவை எப்படியாவது மிஞ்சி விட துடிக்கிறார்.

இதனிடையில் மற்றொரு பிரச்சினையால் ஜிவி. பிரகாஷையும் வெளியே அனுப்புகிறார் நெடுமுடி வேணு.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்? மிருதங்க தாளத்தில் சாதித்துக் காட்டினாரா? வினீத் என்ன செய்தார்? யார் ஜெயித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்து அலட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.

ஒருவேளை ஜிவி பிரகாஷ் கேரக்டரில் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்மால் இந்தளவு ரசித்திருக்க முடியாது. இவர் ஒரு இசையமைப்பாளர் நம்மால் அந்த கலையை கூடவே நடிப்பையும் ரசிக்க முடிகிறது.

ஆனால் மாபெரும் நடிகர் நெடுமுடி வேணுவுடன் நடிக்கும் காட்சிகளில் திணறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். அடிக்கடி முகத்தை மூடி அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் நெடுமுடி வேணு இவரை வாழ்த்தும் போது உற்சாகத்தில் துள்ளாமல் முகத்தை ஏதோ நார்மலாக வைத்திருப்பது நமக்கே நெருடலாக இருக்கிறது. பாலா பட்டறைக்கு சென்று வந்த பிறகும் இப்படி இருக்கலாமா ஜிவி பிரகாஷ்..?

படத்தின் 2வது நாயகனாக வேம்பு ஐயராக வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நீயெல்லாம் நம்பர் 1ஆக வர முடியாது. ஏனா நான்தான் நம்பர் 1 என்று சொல்லும்போதும் கர்வம் தெரிகிறது.

தாளத்துடன் படத்தில் காமெடியையும் இவரே அழகாக செய்திருக்கிறார்.

நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தான் இப்பட நாயகி. தமிழில் 8 தோட்டக்கள், தீதும் நன்று படங்களில் நடித்துள்ளர்.

சர்வம் தாளமயம் பட நாயகி என்றாலும் ஜிவி. பிரகாஷ்க்கு அக்கா மாதிரி இருக்கிறார். முகத்தில் அவ்வளவு மெச்சூரிட்டி. மற்றபடி நடிப்பில் குறையில்லை.

இதிலும் டிவி தொகுப்பாளராக வருகிறார் டிடி. ரியால்ட்டி ஷோக்களில் நடக்கும் தில்லு முல்லுகளையும் அப்பட்டமாக காட்டியிருப்பது சிறப்பு. கூடவே திறமையானவருக்கு மரியாதை எப்படியாவது வந்தே சேரும் என காண்பித்திருப்பது மிகச் சிறப்பு.

வில்லனாக வினீத். தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். யதார்த்த நடிப்பில் நம்மை எப்போதும் போல் கவர்கிறார் குமரவேல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சர்வம் தாளமயம் படத்தின் சர்வமும் நான்தான் என நிரூபித்திருக்கிறார் ஏஆர். ரஹ்மான்.

கர்நாடக இசை சாரலில் நம்மை நனைய வைத்திருக்கிறார். அதற்கேற்ப ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும் இசைந்து கொடுத்திருக்கிறது.

சர்வம் தாளமயம் மற்றும் வரலாமா பாடல்கள் என்றும் கேட்கும் ரகம்.

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இசையுடம் பயணிக்க முடிகிறது.

ஆனால் 2ஆம் பாதியில் கொஞ்சம் நீள்கிறது. க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் கலந்துக் கொடுத்திருக்கலாம்.

ஜிவி. பிரகாஷ் தன் குருவை விட்டு வந்த பிறகு, எதற்கு மனித குருவை தேடிப் போகிறாய். இயற்கையில் இல்லாத இசையா? அதில் உன் குருவை தேடு என்கிறார் அபர்ணா. ஆனால் இறுதியில் குருவிடமே செல்கிறார் ஜிவி. ஒருவேளை இதுதான் குரு பக்தியோ..?

நல்லவேளை ஜாதி மோதல் பற்றி காண்பித்துவிட்டு அதை அப்படியே விட்டு விட்டார் டைரக்டர். இல்லையென்றால் இசை திசை மாறியிருக்கும்.

ஆக இசையில் லயிக்கும் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.

சர்வம் தாளமயம்… மிருதங்கமும் மீளாத மனமும்…

நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரபுதேவா (திரு), பிரபு (ராமகிருஷ்ணன்), நிக்கிகல்ராணி (சாரா), ஆதாசர்மா (Psycology Student), விவேக் பிரசன்னா (துபாய் ராஜா), ரவிமரியா (புல்லட் புஷ்பராஜ் ) அரவிந்த் ஆகாஷ், செந்தில், கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடித்துள்ளனர். கெளரவ வேடத்தில் வைபவ்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா.
எடிட்டிங் – G.சசிகுமார்
கலை – விஜய்முருகன்
நடனம் – ஜானி, ஸ்ரீதர்
ஸ்டண்ட – கனல் கண்ணன்
தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி
தயாரிப்பு – T.சிவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
பிஆர்ஓ – மௌனம் ரவி

Charlie Chaplin 2 stills 1

கதைக்களம்…

முதல் பாகத்தை போல இந்த சார்லி சாப்ளின் படத்திலும் பிரபுதேவாவின் கேரக்டர் திரு. மற்றபடி அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார் பிரபுதேவா. பிரபு ஒரு டாக்டர். பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் பிரபு தேவா.

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நிக்கியை திருமணம் செய்யவிருக்கிறார். அதன்படி திருமணமும் திருப்பதியில் நடக்க இருக்கிறது.

அந்த சமயம் நிக்கியின் பழைய வீடியோவை ஒன்றை பிரபு தேவாவுக்கு காட்டுகிறார் அவரின் நண்பர். அதில் நிக்கி ஒருவரை லிப் கிஸ் அடிப்பதாக உள்ளது.

இதனால் நிக்கியின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறார் பிரபுதேவா.

மேலும் தண்ணி அடித்துவிட்டு போதையில் நிக்கியையும் அவரது குடும்பத்தையும் தவறாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? அந்த காதலன் யார்? என்ன தொடர்பு, நிக்கியுடன் கல்யாணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Charlie Chaplin 2 stills 2

நடிகர் நடிகையரின் நடிப்பு எப்படி.?

நடிப்பு பாதி நடனம் மீதி என பிரபு தேவா பின்னியிருக்கிறார். வழக்கம் போல ஒவ்வொரு பாடலின் டான்சிலும் சிக்சர் அடிக்கிறார்.

நிக்கி கல்ராணி மற்றும் அதா ஷர்மா என இரண்டு நாயகிகள். ஒருவர் அழகில் கவர்கிறார் என்றால் மற்றொருவர் கவர்ச்சியில் ஈர்க்கிறார்.

இரண்டு ஹீரோயின்களும் பாடல் காட்சியில் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார்கள்.

பிரபுதேவாவுக்கு தப்பான ஐடியா கொடுத்துவிட்டு அவரை மாட்டி விடுவதில் விவேக் பிரசன்னா (துபாய் ராஜா) சிரிக்க வைக்கிறார்.

பிரபு மற்றும் டி. சிவா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். சம்மந்திகள் ரகளை செய்துள்ளனர்.

இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், அமித் பார்கவ், சமீர் கோச்சார் ஆகியோரின் கேரக்டர் நிறைவு.

ஆனால் வில்லன் வேடம் வலுவில்லை. ஏதோ வில்லன் வேடம் வேண்டும் என்று வைத்த போல உள்ளது.

அதிலும் ரவி மரியா கேரக்டர் ஏன் என்றே தெரியவில்லை. எடிட்டர் கட் செய்து எங்களை காப்பாற்றியிருக்கலாம்.

Charlie Chaplin 2 stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளமும் ஆட்டமும் போட வைக்கிறது.

சின்ன மச்சான்…, ஐ வாண்ட் டூ மேரி யூ மாமா… இவள இவள… ஆகிய மூன்று பாடல்கள் ரீபீட் மோடு.

ஒளிப்பதிவாளர் கை வண்ணத்தில் காட்சிகள் அருமை. ஆனால் எடிட்டர் சில காட்சிகளை கை வைத்திருக்கலாம்.

முதல்பாகம் போல காமெடியை இதில் எதிர்பார்த்து செல்ல வேண்டாம். அதில் பிரபு மற்றும் பிரபுதேவா இருவரும் வேற லெவலில் கலக்கிருப்பார்கள். இதில் அந்த வேகம் இல்லை.

பலவீனமான திரைக்கதையால் படம் சோதிக்கிறது. சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது.

முதல் பாதி சுவாரஸ்யம் இல்லை என்றாலும் 2ஆம் பாதியில் நம்மை சிரிக்க வைத்துள்ளார் டைரக்டர் சக்தி சிதம்பரம்.

சார்லி சாப்ளின் 2… நகைச்சுவையும் நகராத கதையும்

More Articles
Follows